திருச்சி பிராட்டியூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று நடந்த சோதனை.

 
தமிழகம்

தமிழகம் முழுவதும் 40 ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் சோதனை: லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி நடவடிக்கை

ரூ.31.85 லட்சம் பறிமுதல்-ஜிபேயில் ரூ.5.95 லட்சம் பரிமாற்றம் கண்டுபிடிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழு​வதும் உள்ள வட்​டார போக்​கு​வரத்து அலு​வல​கங்​களில் 40 இடங்​களில் லஞ்ச ஒழிப்​புத்​துறை அதி​காரி​கள் நேற்று திடீர் சோதனை நடத்​தினர். இதில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பிடிபட்டது.

அரசு அலு​வல​கங்​களில் பொது மக்​களுக்கு சேவை வழங்க அதி​காரி​கள் லஞ்​சம் பெறு​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இதையடுத்​து, சம்​பந்​தப்​பட்ட இடங்​களில் அடுத்​தடுத்து சோதனை நடத்த தமிழக லஞ்ச ஒழிப்​புத்​துறை இயக்​குநர் (கூடு​தல் டிஜிபி) அருண் அப்​பிரிவு அதி​காரி​களுக்கு உத்​தர​விட்​டார். அதன்​படி, கடந்த 4-ம் தேதி தமிழகம் முழு​வ​தி​லும் 62 சார் பதி​வாளர் அலு​வல​கங்​களில் சோதனை நடத்​தப்​பட்​டது. இதில், கணக்​கில் வராத ரூ.37.76 லட்​சம் பறி​முதல் செய்​யப்​பட்​டது.

இந்​நிலை​யில் ஆர்​டிஓ (வட்​டார போக்​கு​வரத்து அலு​வல​கம்) அலு​வல​கங்​களில் வாகனப் பதிவு, ஓட்​டுநர் உரிமம் வழங்​குதல், தகு​திச் சான்று உள்​ளிட்ட பணி​களுக்​காக பொது​மக்​களிடம் லஞ்​சம் பெறப்​படு​வ​தாக புகார் எழுந்​தது. இதையடுத்​து, அங்கு சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறை இயக்​குநர் உத்​தர​விட்​டார்.

அதன்​படி லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் பல்​வேறு மாவட்​டங்​களில் உள்ள வட்​டார போக்​கு​வரத்து அலு​வல​கங்​கள், மோட்​டார் வாகன ஆய்​வாளர் அலு​வல​கங்​கள் மற்​றும் இடைத்​தரகர்​களாக செயல்​பட்ட ஓட்​டுநர் பயிற்சி பள்​ளி​களில் நேற்று பிற்​பகல் முதல் ஒரே நேரத்​தில் சோதனை மேற்​கொண்​டனர். குறிப்​பாக, சென்னை வளசர​வாக்​கம் புளியந்​தோப்​பு, கொளத்​தூர், அண்​ணாநகர், காஞ்​சிபுரம், வேலூர், பூந்​தமல்​லி, அரக்​கோணம், செங்​கல்​பட்​டு, கள்​ளக்​குறிச்​சி, சிதம்​பரம், திரு​வண்​ணா​மலை, திருச்சி மேற்​கு, அரியலூர், பெரம்​பலூர், குளித்​தலை, புதுக்​கோட்டை ஆலங்​குடி, கும்​பகோணம், தஞ்​சாவூர், நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை, கோயம்​புத்​தூர் மத்​தி,பெருந்​துறை, நீல​கிரி, கூடலூர், தருமபுரி, பாலக்​கோடு, கிருஷ்ணகிரி, திருப்​பூர் தெற்​கு,பரமத்​திவேலூர், சேலம் மேற்​கு, வாடிபட்​டி, பரமக்​குடி, ஸ்ரீவில்​லிபுத்​தூர், பழனி, உத்​தம​பாளை​யம், திருநெல்​வேலி, நாகர்​கோ​வில், தென்​காசி, தூத்​துக்​குடி, திருப்​பத்​தூர், காரைக்​குடி என 40 இடங்​களில் ஒரே நேரத்​தில் சோதனை நடத்​தினர்.

அப்​போது, அலு​வலக கதவு​கள் மூடப்​பட்டு உள்ளே இருந்த அதி​காரி​கள், பணி​யாளர்​கள் வெளியே செல்ல அனு​ம​திக்​கப்​பட​வில்​லை. அவர்​களது செல்​போன்​கள் பெறப்​பட்டு தனி இடத்​தில் வைக்​கப்​பட்​டன. அலு​வல​கத்​துக்கு வந்த பொது​மக்​கள் வெளியே செல்ல வேண்​டாம் என அறி​வுறுத்​தப்​பட்​டது. இந்த சோதனை​யின்​போது அலு​வல​கங்​களில் இருந்த ஆவணங்​கள், பண பரிவர்த்​தனை விவரங்​கள் மற்​றும் முக்​கிய பதிவேடு​கள் ஆய்வு செய்​யப்​பட்​டன. மேலும், அலு​வலக ஊழியர்​கள், இடைத்​தரகர்​கள் மற்​றும் அலு​வலக பணி​களு​டன் தொடர்​புடைய நபர்​களிடம் அதி​காரி​கள் விசா​ரணை மேற்​கொண்​டனர்.

சோதனை​யின் முடி​வில் கணக்​கில் வராத ரூ.31 லட்​சத்து 85,700 கைப்​பற்​றப்​பட்​டது. மேலும், ஜிபே மூலம் ரூ.5 லட்​சத்து 95,468 பரி​மாறியதும் கண்​டறியப்​பட்​டது.

குறிப்​பாக, ‘ஜிபே’ மூலம் காரைக்​குடி ஆர்​டிஓ அலு​வல​கத்​தில் ரூ.2.50 லட்​சம், திருப்​பத்​தூரில் ரூ.88,580, பெருந்​துறை​யில் ரூ.2,400, ஆலங்​குடி​யில் 1 லட்​சத்து 55,850, செங்​கல்​பட்​டில் ரூ.98,688 பெறப்​பட்​டிருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது.

அதோடு ரொக்​க​மாக அதி​கபட்​சம் மயி​லாடு​துறை​யில் 1 லட்​சத்து 75,730 ரூபாய் பறி​முதல் செய்​யப்​பட்​டது. ஆலங்​குடி​யில் ஜிபே மூலம் பணப்​பரி​மாற்​றம் செய்​யப்​பட்ட நிலை​யில், ரொக்​க​மாக​வும் ரூ.3,000 பறி​முதல் செய்​யப்​பட்​டது. இதே​போல், சோதனை நடை​பெற்ற 40 இடங்​களி​லும் சிறிதும், பெரிது​மாக கணக்​கில் வராத கட்​டுக்​கட்​டாக பணம் பறி​முதல் செய்​யப்​பட்​டிருந்​தது.

SCROLL FOR NEXT