தமிழகம்

தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடர்பாக கூட்டம்: ‘டேக் டைவர்ஷன்’ அரசியல் வேண்டாம் என துரைமுருகன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ‘மேகே​தாட்டு விவ​காரத்​தில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு மசோதா என தவெக அரசு ‘டேக் டைவர்​ஷன்’ அரசி​யலை மேற்​கொள்ள வேண்​டாம்’ என்று திமுக பொதுச்​செய​லா​ளர் துரை​முரு​கன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தின் நலனை​யும், மாநிலத்​துக்​குரிய பிர​தி​நி​தித்​து​வத்​தை​யும் பாதிக்​காத வகை​யில் நியாய​மான முறை​யில் தொகுதி மறுசீரமைப்பு மேற்​கொள்​ளப்பட வேண்​டும் என்​பதே திமுக​வின் நிலைப்​பாடு.

அதில் எந்த தடு​மாற்​ற​மும் திமுக​வுக்கு இல்​லை. முறையற்ற தொகுதி மறுசீரமைப்​பால் இந்​திய அளவில் ஏற்​பட​வுள்ள ஆபத்தை முதன்​முதலாக எடுத்​துரைத்​து, அதற்கு எதி​ரான வலு​வான கருத்தை உரு​வாக்​கி, ஒரு​மித்த குரல்​களை ஒன்​றிணைத்​ததே திமுக​வும், கட்சி தலை​வர் மு.க.ஸ்​டா​லினும்​தான் என்​பதை நாடறி​யும்.

எனவே, தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடர்​பாக என்ன செய்ய வேண்​டும் என்று திமுக​வுக்கு அறி​வுரை சொல்​லும் தகுதி எந்​தக் கட்​சிக்​கும் இல்​லை. தவெக அரசு ஆக.8-ம் தேதி (இன்​று) அழைப்பு விடுத்​திருக்​கும் நாடாளு​மன்ற உறுப்​பினர்​கள் கலந்​தாய்​வுக் கூட்​டத்​தில் திமுக உறுப்​பினர்​கள் பங்​கேற்று எங்​களது கருத்தை தெரி​விப்​ப​தில் எங்​களுக்கு தயக்​கம் இல்​லை.

ஆனால் நடை​பெற்று வரும் நாடாளு​மன்ற கூட்​டத்​தொடரின் அலு​வல் அட்​ட​வணை​யில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா அறி​முகப்​படுத்​து​வது தொடர்​பாக எது​வும் தெரிவிக்​கப்​ப​டாத நிலை​யில், ஏற்​கெனவே முடி​வெடுக்​கப்​பட்ட தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடர்​பாக மட்​டும் கூட்​டம் கூட்​டு​வதை ஏற்க முடி​யாது.

தொகுதி மறுசீரமைப்​பின் காரண​மாக தமிழகத்​துக்​கான பிர​தி​நி​தித்​துவ உரிமை பாதிக்​கப்​படக் கூடாது. பாதிக்​கப்​பட்​டால் அதைத் தடுக்​கும் முன்​னணி படை​யாக திமுக இருக்​கும்.

அதே​நேரம் இதற்கு முன்​பாக, கர்​நாடக அரசு மேகே​தாட்டு அணை கட்ட முனைப்பு காட்​டும் விவ​காரம் குறித்து விவா​திக்​க​வும், தமிழகத்​தில் உள்ள கட்​சிகளின் ஒற்​றுமையை வெளிப்​படுத்​த​வும் அனைத்​துக் கட்சி கூட்​டத்தை கூட்ட வேண்​டும் என்ற நிபந்​தனையை தமிழக அரசிடம் திமுக முன்​வைக்​கிறது.

இன்​றைய சூழலில் காவிரி உரிமையை மீட்​பதும், மேகே​தாட்டு அணையை தடுப்​பதும் மிகமிக முக்​கிய​மானவை. தமிழகத்​தின் ஒட்​டுமொத்த உணர்வை வெளிப்​படுத்த வேண்​டிய அவசி​யம் எழுந்​துள்ள நிலை​யில், தவெக அரசு ‘டேக் டைவர்​ஷன்’ அரசி​யலை மேற்​கொள்ள வேண்​டாம் என்று கேட்​டுக்​கொள்​கிறோம். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT