துரை வைகோ | கோப்புப் படம் 
தமிழகம்

அங்கீகாரம் பெற முயற்சிக்கும் மதிமுக: ஆசைக்கு அணைபோடும் திமுக

அப்செட்டில் துரை வைகோ

கோ.யுவராஜ்

தமி​ழ​கத்​தில் சட்​டப்​பேரவை தேர்​தல் விரை​வில் நடை​பெற உள்ள நிலை​யில், அரசி​யல் கட்​சிகள் கூட்​டணி கணக்​கு​கள், தொகுதி பங்​கீடு என பரபரப்​பாக இயங்கி வரு​கின்​றன. இந்​நிலை​யில் திமுக கூட்​ட​ணி​யில் நீண்ட கால​மாக அங்​கம் வகிக்​கும் கட்​சிகள் கூடு​தல் சீட்​களை பெறலாம் என எண்​ணினர்.

ஆனால் திமுக கூட்​ட​ணி​யில் புதி​தாக கட்​சிகள் இணைந்​த​தால் கடந்த முறை போட்​டி​யிட்​டதை விட தொகு​தி​களும் குறைய​லாம் என கூறப்​பட்​ட​தால் கூட்​டணி கட்​சி​யினர் கலக்​கம் அடைந்​தனர். கடந்த 2021-ம் சட்​டப்​பேரவை தேர்​தலில் மதி​முக 6 தொகு​தி​களில் உதயசூரியன் சின்​னத்​தில் போட்​டி​யிட்டு 4 தொகு​தி​களில் வென்​றது. இந்​நிலை​யில் 2024 நாடாளு​மன்ற தேர்​தலில் திருச்சி தொகு​தி​யில் துரை வைகோ தனி சின்​னத்​தில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றார்.

          

இந்​நிலை​யில் இந்த சட்​டப்​பேரவை தேர்​தலில் கட்​சிக்​கான அங்​கீ​காரத்தை மீண்​டும் பெற வேண்​டும் என மதிமுக முயற்​சிக்​கிறது. இதனிடையே திமுக தொகு​திப்​பங்​கீட்டு குழு​வினர் உடன் நடந்த பேச்​சு​வார்த்​தை​யில், மதி​முக குழு​வினர் 12 தொகு​தி​களில் தனி சின்​னத்​தில் போட்​டி​யிடு​வோம் என்று கூறி​யிருந்​தனர். ஆனால் திமுக குழு​வினர் 5 தொகு​தி​களில் உதயசூரியன் சின்​னத்​தில் போட்​டி​யிட வலி​யுறுத்​தி​ய​தாக கூறப்​படு​கிறது.

குறைந்​த​பட்​சம் 7 தொகு​தி​களில் வெற்​றி​பெற்று மாநில கட்சி அங்​கீ​காரத்தை பெற வேண்​டும் என மதி​முக ஆசைப்​படும் நிலை​யில் கடந்த தேர்​தலை விட குறை​வான தொகு​தி​கள் ஒதுக்​கப்​படு​வ​தால் துரை வைகோ அப்​செட்​டில் உள்​ளார் என்று கூறப்​படு​கிறது.

இது குறித்து மதி​முக மூத்த நிர்​வாகி​கள் கூறுகை​யில் “உதயசூரியன் சின்​னத்​தில்​தான் போட்​டி​யிட வேண்​டும் என வைகோ​விடம் முதல்​வரே நேரடி​யாக கோரி​யிருக்​கி​றார். முதல்​வரே நேரடி​யாக பேசுவ​தால் ஒப்​புக்​கொள்​ளலாமா என வைகோ யோசிக்​கி​றார். ஆனால், இதில் துரை வைகோவுக்கு துளி​யும் விருப்​பமில்​லை. திமுக​வின் இந்த கோரிக்​கையை நாம் ஏற்க கூடாது என அவர் வலி​யுறுத்தி வரு​கி​றார்.” என்​ற​னர்.

அவசர உயர் நிலைக் குழுக் கூட்​டம்: இந்​நிலை​யில், மதி​முக அவசர உயர் நிலைக் குழுக் கூட்​டம் இன்று காலை 11 மணி அளவில் அவைத் தலை​வர் ஆடிட்​டர் அர்​ஜூன​ராஜ் தலை​மை​யில் தாயகத்​தில் நடை​பெறும் என வைகோ அறி​வித்​துள்​ளார். இந்த கூட்​டத்​தில் இந்த விவ​காரம் குறித்து ஆலோ​சிக்​கப்படும் என்​றும் திமுக கூட்​ட​ணி​யில் தொடர்​வது குறித்து முக்​கிய முடிவு​கள் எடுக்​கப்​படலாம் என மதி​முக வட்​டாரங்​களில் கூறப்​படுகிறது.

SCROLL FOR NEXT