தமிழகம்

இன்று மதிமுக பொதுக்குழு... நாளை அறிவாலயப் பிரவேசம்! - பதிலடி கொடுக்கத் தயாராகும் திமுக

குள.சண்முகசுந்தரம்

கூட்​டணி குறித்து முடி​வெடுப்​ப​தற்​காக இன்று கூடு​கிறது மதி​முக பொதுக்​குழு. அதேசம​யம், தங்​களைத் தூற்​றி​விட்டு தவெக-வை தூக்​கி​வைத்​துக் கொண்​டாடும் வித​மாக இன்​றைய பொதுக்​குழுவில் முடி​வெடுக்​கப் ​போகிறது மதி​முக என்​பதை ஊகித்​து​விட்ட திமுக தலை​மை, மதி​முக-​வில் இருந்து ஓரங்​கட்​டப்​பட்ட ‘பொடா தியாகி​கள்’ உள்​ளிட்​டோரை​யும் நடப்பு நிர்​வாகி​கள் சிலரையும் நாளை காலை​யில் அறி​வாலயப் பிர​வேசத்​துக்கு அழைத்​திருக்​கிறது.

தவெக அரசுக்​கும் முதல்​வர் விஜய்க்​கும் ஆதர​வான கருத்​துகளை தொடர்ந்து பேசி வரும் வைகோ​வும் துரை வைகோ​வும், திமுக-வுக்கு எதி​ரான விமர்​சனங்​களை​யும் எடுத்து வீசி வரு​கிறார்​கள். இதை வைத்​து, அந்​தக் கட்சி பயணிக்​கப் போகும் திசையைக் கணித்​து​விட்ட திமுக-​வும் மதி​முக-வை​யும் வைகோவை​யும் மானாங்​கண்​ணி​யாய் விமர்​சித்து வரு​கிறது.

“ஒட்​டுமொத்த கட்​சி​யை​யும் ஒரு மண்​டபத்​துக்​குள் அடைத்​து​விடலாம்” என்று துணைப் பொதுச்​செய​லா​ளர் ஆ.ராசா ‘இறங்​கி’ அடிக்​குமளவுக்கு இருக்​கிறது மதி​முக மீதான திமுக-​வின் தாக்​குதல்​கள்.

இந்த நிலை​யில், உதயசூரியன் சின்​னத்​தில் போட்​டி​யிட்டு வெற்​றி​பெற்ற மதி​முக-வைச் சேர்ந்த எம்​எல்​ஏ-க்​களான சீர்​காழி செந்​தில் செல்​வனை​யும், கடையநல்​லூர் ராஜேந்​திரனை​யும் ராஜி​னாமா செய்​ய​வைத்து மீண்​டும் அவர்​களை தனி சின்​னத்​தில் போட்​டி​யிட வைக்க மதி​முக தலைமை மெனக்​கிட்டு வரு​கிறது. ஆனால், இவ்​விஷ​யத்​தில் எம்​எல்​ஏ-க்​கள் இரு​வருமே தயங்​கு​வ​தாகத் தெரி​கிறது.

பதவி​களை ராஜி​னாமா செய்​து​விட்டு தவெக-​வில் இணைந்​திருக்​கும் அதி​முக எம்​எல்​ஏ-க்​களும் இனிமேல் இணை​ய​விருக்​கும் சி.​விஜய​பாஸ்​கர் போன்​றவர்​களும் மீண்​டும் போட்​டி​யிட்​டால் விசில் சின்​னத்​தில் தான் போட்​டி​யிடு​வார்​கள்.

அவர்​களின் வெற்​றி​யானது இலகு​வாகக்​கூட இருக்​கலாம். ஆனால், மதி​முக எம்​எல்​ஏ-க்​கள் ராஜி​னாமா செய்​தால் தனி சின்​னத்​தில் போட்​டி​யிட வேண்டி இருக்​கும். அப்​படி​யான சூழலில் மீண்​டும் வெற்​றி​பெறு​வது எந்​தளவுக்கு சாத்​தி​யம் என்று சொல்​வதற்​கில்​லை. இதையெல்​லாம் யோசித்​துப் பார்த்தே அவர்​கள் தயங்​கு​வ​தாகத் தெரி​கிறது.

இருப்​பினும் தலை​மை​யின் கட்​டளையை மீற​முடி​யாத அவர்​கள் இரு​வரும், விஜய் அரசு மீதான நம்​பிக்கை கோரும் தீர்​மானம் வாக்​கெடுப்​புக்கு வந்த நாளில் அவைக்கு வராமல் புறக்​கணித்​தார்​கள். அன்​றைய தினம் மதி​முக உயர்​நிலைக் குழு கூட்​டம் இருந்​த​தால் அவர்​கள் இரு​வரும் சட்​டமன்​றத்​துக்கு வரமுடிய​வில்லை என்று காரணம் சொன்​னார் வைகோ. அதே​போல், நேற்​றைய தின​மும் மதி​முக உயரிநிலைக் குழு கூட்​டம் கூடியது. இந்​தக் கூட்​டத்​தில், ராஜேந்​திரன் மட்​டும் கலந்து கொண்​டார். செந்​தில் செல்​வன் கலந்​து​கொள்​ள​வில்​லை.

“நான் திமுக-​வில் சேர்ந்து திமுக எம்​எல்​ஏ-​வாக இருப்​ப​தால் மதி​முக உயர்​நிலைக் கூட்​டத்​தில் கலந்​து​கொள்​ள​வில்​லை” என்று அவர் காரணம் சொன்​னார். இப்​போது இப்​படிச் சொல்​பவர் முந்​தைய கூட்​டத்​தில் எப்​படி கலந்து கொண்​டார் என்​பதும் விவாதப் பொருளாகிறது. அதேசம​யம், ராஜேந்​திரன் துணைப் பொதுச் செய​லா​ளர் என்ற முறை​யில் நேற்​றைய கூட்​டத்​தில் கலந்து கொண்​ட​தாகச் சொல்​கிறது மதி​முக வட்​டாரம்.

கூட்​டணி விஷ​யத்​தில் மதி​முக கிட்​டத்​தட்ட ஒரு முடிவுக்கு வந்​து​விட்ட நிலை​யில், அதற்கு எதிர்​வினை​யாக முன்​னாள் மற்​றும் இந்​நாள் மதி​முக நிர்​வாகி​களை கட்​சி​யில் சேர்க்க திமுக தலைமை இசைவு கொடுத்​திருக்​கிறது. மதி​முக-​வில் இருந்து மல்லை சத்யா ஒதுக்​கப்​பட்ட போதே மதி​முக முன்​னாள், இந்​நாள் நிர்​வாகி​கள் சிலர் திமுக-​வில் இணைய விருப்​பம் தெரி​வித்​தார்​கள்.

அந்​தப் பட்​டியலில், வைகோவுடன் ‘பொ​டா’ சிறை​வாசிகளாக இருந்த மதுரை அழகுசுந்​தரம், திருப்​பத்​தூர் புல​வர் செவந்​தி​யப்​பன் ஆகியோ​ரும் டி.ஆர்​.ஆர்​.செங்​குட்​டு​வன், முன்​னாள் விருதுநகர் மாவட்​டச் செய​லா​ளர் சண்​முகசுந்​தரம், முன்​னாள் அமைச்​சர் புதுக்​கோட்டை சந்​திரசேகரன், வழக்​கறிஞர் வீர​பாண்​டியன் உள்​ளிட்ட 13 முக்​கிய தளப​தி​கள் இருந்​தார்​கள். ஆனால், இவர்​களை கட்​சிக்​குள் சேர்த்​தால் கூட்​ட​ணிக்​குள் குழப்​பம் வரும் என்​ப​தால் அப்​போது இதற்கு ஸ்டா​லின் சம்​ம​திக்​க​வில்​லை.

இந்த நிலை​யில், மதி​முக தற்​போது எடுக்​கும் அரசி​யல் நகர்​வு​களுக்கு பதிலடி கொடுக்​கும் வித​மாக​வும் வைகோ​வும் துரை வைகோ​வும் எடுத்து வைக்​கும் விமர்​சனங்​களை நீர்த்​துப் போகச் செய்​ய​வும், தேர்​தலுக்கு முன்பு வரு​வ​தாகச் சொன்ன முன்​னாள் மதி​முக நிர்​வாகி​களை இப்​போது கட்​சி​யில் இணைத்​துக் கொள்ள இசைவு தெரி​வித்​திருக்​கிறார் ஸ்டா​லின்.

அதன்​படி அழகுசுந்​தரம், புல​வர் செவந்​தி​யப்​பன் உள்​ளிட்ட மதி​முக முன்​னாள் நிர்​வாகி​கள் 12 பேர் கொண்ட பட்​டியல் திமுக தலை​மை​யிடம் தரப்​பட்​டிருப்​ப​தாகச் சொல்​கிறார்​கள். இவர்​களோடு சேர்த்து தற்​போது மதி​முக பொறுப்​பு​களில் இருக்​கும் நாற்​பதுக்​கும் மேற்​பட்​ட​வர்​களை​யும் அறி​வால​யத்​துக்கு அழைத்து வரு​வ​தாக உத்​தர​வாதம் கொடுத்​திருக்​கிறார்​களாம். இவர்​கள் அனை​வரும் நாளை காலை 11 மணி​யள​வில் ஸ்டா​லின் முன்​னிலை​யில் திமுக-​வில் தங்​களை இணைத்​துக் கொண்​டிருப்​பார்​கள் என்​கிறார்​கள்.

இந்த இணைப்​புப் பட்​டியலில் சீர்​காழி எம்​எல்​ஏ-​வான செந்​தில் செல்​வனின் பெயரும் இருந்​தா​லும் ஆச்​சரியமில்லை என்று சொல்​லும் மதி​முக முன்​னாள் நிர்​வாகி​கள், “அதற்கு முன்​னோட்​ட​மாக இன்றே அவர் ஸ்டா​லினைச் சந்​தித்​துப் பேசி தனது நிலைப்​பாட்டை விளக்​கக்​கூடும். மதி​முக மற்​றும் வைகோவுக்கு நெருக்​க​மானவர்​கள் இருக்​கும் வட்​டாரத்​தில் இருப்​ப​தால் கடையநல்​லூர் ராஜேந்​திரனுக்கு அந்த வளை​யத்தை விட்டு வரு​வ​தில் கொஞ்​சம் தயக்​கம் இருக்​கலாம். ஆனால், செந்​தில் செல்​வனுக்கு அப்​படி​யான சங்​கடம் ஏதும் இல்​லை” என்​றும் சொல்​கிறார்​கள். இன்​றைய மதி​முக பொதுக்​குழு​வில் தி​முக-வுக்கு எதி​ராக எடுத்​து​வைக்​கப்​படும் விமர்​சனங்​களுக்​கு வைகோவுடன்​ நீண்​ட காலம்​ பயணித்​த அந்​தக்​ கட்​சி​யின்​ முன்​னாள்​ நிர்​வாகி​களை வைத்​தே ​நாளை பதில்​ கொடுக்​கப்​ போகிறது திமுக.

SCROLL FOR NEXT