சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழுவை திமுக தலைமை அமைத்துள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடக்கவிருக்கிறது. இதன் காரணமாக அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், திமுக சார்பில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் குழுவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அமைத்துள்ளார்.
குழு உறுப்பினர்கள் : கே.என்.நேரு (முதன்மைச் செயலாளர் திமுக)
திருச்சி சிவா (துணைப் பொதுச்செயலாளர் திமுக)
ஆ.இராசா (துணைப் பொதுச்செயலாளர் திமுக)
ஆர்.எஸ்.பாரதி (திமுக அமைப்புச் செயலாளர்)
எ.வ. வேலு (திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்)
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (திமுக உயர்நிலை செயய்திட்டக்குழு உறுப்பினர்)