போடியில் அமலாக்கத் துறை சோதனை நடந்த ஏலக்காய் கிடங்கு. (உள்படம்) நகராட்சித் தலைவர் ராஜராஜேஸ்வரி, அவரது கணவர் சங்கர்.

 
தமிழகம்

வட மாநிலங்களில் ஏலக்காய் விற்பனை மூலம் திமுக நிர்வாகி ரூ.100 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு: அமலாக்கத் துறை அதிகாரிகள் தகவல்

என்.கணேஷ்ராஜ்

போடி: வட மாநிலங்​களில் உரிய ஆவணங்​களின்றி ஏலக்​காய் விற்​பனை செய்​ததன் மூலம், போடி திமுக நிர்​வாகி ரூ.100 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்​ததற்​கான ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​டுள்​ள​தாக அமலாக்​கத் துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

தேனி மாவட்​டம் போடி நகராட்​சித் தலை​வ​ராக இருப்​பவர் ராஜ ராஜேஸ்​வரி. இவரது கணவர் சங்​கர். திமுக மாநில செயற்​குழு உறுப்​பின​ராக​வும், போடி 29-வது வார்டு கவுன்​சில​ராக​வும் உள்​ளார். இவர் ஏலக்​காய் வர்த்தக நிறு​வன​மும் நடத்தி வரு​கிறார்.

இந்​நிலை​யில், வட மாநிலங்​களுக்கு பல டன் ஏலக்​காய் அனுப்​பிய​தில் வரி ஏய்ப்​புச் செய்​த​தாக சங்​கர் மீது புகார் எழுந்​தது. இதையடுத்​து, கடந்த 6-ம் தேதி அவருக்​குச் சொந்​த​மான கிடங்​கு, அலு​வல​கத்​தில் அமலாக்​கத் துறை, வரு​மானம் மற்​றும் வணி​கவரித் துறை​யினர் விசா​ரணை நடத்​தினர். இதில் பல்​வேறு ஆவணங்​கள் கைப்​பற்​றன. தொடர்ந்​து, சங்​கர், ராஜ ராஜேஸ்​வரி, அவர்​களது​மகன் லோகேஷ் ஆகியோரிடம் விசா​ரணை நடை​பெற்​றது.

இந்​நிலை​யில், சங்​கருடன் நெருங்​கிய தொடர்​பில் உள்ள தனி​யார் பள்​ளித் தாளாளர் வேதாஜெய​ராஜ், கவுன்​சிலர் முரு​கேசன், முன்​னாள் நகராட்சி தலை​வரும், ஓபிஎஸ் அணி​யைச் சேர்ந்​தவரு​மான பழனி​ராஜன், சங்​கரின் கார் ஓட்​டுநர் வடிவேலு உள்​ளிட்ட 20-க்​கும் மேற்​பட்​டோரிடம் விசா​ரணை நடத்​தப்​பட்டது.

கடந்த 7 மாதங்​களில் நடந்த வங்​கிப் பரிவர்த்​தனை, பணப் பரி​மாற்​றம், ஏலக்​காய்​கள் அனுப்​பப்​பட்ட நிறு​வனங்​கள் உள்​ளிட்டவிவரங்​களை​யும் அதி​காரி​கள் ஆய்வு செய்து வரு​கின்​றனர்.ரூ.100 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்​துள்​ள​தாக​வும், இதற்​கான ஆவணங்​களும், சாட்​சிகளும் சரி​யாக இருப்​ப​தால் விரை​வில் கைது நடவடிக்கை இருக்​கலாம் என்​றும் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

SCROLL FOR NEXT