தமிழகம்

ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை: கூட்டணிக் கட்சிகளிடம் திமுக திட்டவட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: ஆட்​சி​யில் பங்கு கோரிக்​கையை ஏற்க முடி​யாது, கூட்​ட​ணிக்​குள் தேவையற்ற குழப்​பத்தை ஏற்​படுத்த வேண்​டாம் என காங்​கிரஸ் உட்பட தோழமை கட்​சிகளிடம் திமுக திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​துள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

தமிழகத்​தில் சட்​டப்​பேரவை தேர்​தல் இன்​னும் சில மாதங்​களில் நடத்​தப்பட உள்​ளது. இதற்​கான ஆயத்​தப் பணி​களை திமுக முழு​வீச்​சில் மேற்​கொண்டு வரு​கிறது. ஓரணி​யில் தமிழ்​நாடு, உடன்​பிறப்பே வா, மண்டல மாநாடு​கள் போன்ற தொடர் செயல்​பாடு​களை திமுக முன்​னெடுத்து வரு​கிறது. அதே​நேரம்

திமுக கூட்​ட​ணி​யில் அங்​கம் வகிக்​கும் காங்​கிரஸ், விசிக உள்​ளிட்ட கட்​சிகள் மறை​முக​மாக​வும், வெளிப்​படை​யாக​வும் ‘ஆட்​சி​யில் பங்​கு’ என்ற கோரிக்​கைகளை முன்​வைத்து வரு​கின்​றன.

தவெக தலை​வர் விஜய், தனது கட்​சி​யின் முதல் மாநாட்​டில் பேசி​ய​போது கூட்​டணி ஆட்சி என அறி​வித்​தார். இதன்​தொடர்நிகழ்​வாக திமுக கூட்​ட​ணி​யில்

இந்த விவ​காரம் பேசுபொருளானது. எனினும், இதில் திமுக தொடர்ந்து மவுனம் காத்​து​வந்​தது. இந்​நிலை​யில் கூட்​டணி ஆட்சி கோரிக்​கையை ஏற்க முடி​யாது என தோழமை கட்​சிகளிடம் திமுக தலைமை திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​து​விட்​ட​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

திமுகவைப் பொறுத்​தவரை சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நெருங்​கும் வேளை​யில், இது கூட்​ட​ணிக்​குள் தேவையற்ற குழப்​பத்தை ஏற்​படுத்​தும். வாக்​காளர்​களிட​மும் திமுக தனித்து மெஜாரிட்டி பெறாது என்ற தவறான பிம்​பத்தை உரு​வாக்​கி​விடும் என்று அதன் தலைமை கருதுகிறது. இதன் காரண​மாக தொகு​திப் பங்​கீட்​டில் வேண்​டு​மா​னால் சில சமரசங்​களை செய்​கிறோம். ஆனால், அதி​காரப் பங்​கீடு கோரிக்​கையை கைவிட வேண்​டுமென தோழமைக் கட்​சிகளிடம் திமுக தலைமை தெரி​வித்​து​விட்​ட​தாக திமுக தலைமை அலுவலக வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன.

சமீபத்​தில் நடை​பெற்ற முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், காங்​கிரஸ் மூத்த தலை​வர் ப.சிதம்​பரம் ஆகியோர் இடையே​யான சந்​திப்​பிலும் திமுக​வின் நிலைப்​பாட்டை உறு​தி​யாக ஸ்டா​லின் கூறி​விட்​ட​தாக கூறப்​படு​கிறது. அத்​துடன், காங்​கிரஸ் உட்​கட்சி பிரச்​னை​களால் தொகுதி ஒதுக்​கீட்​டிலும் திமுக​வுக்கு உள்ள சிரமங்​களை ஸ்டா​லின் விளக்​கிய​தாக​வும் தெரி​கிறது.

அதற்கு தேசிய தலைமை திமுக​வுடன் தொடர்ந்து பயணிக்​கவே விரும்​புவ​தாக​வும், திமுக தரப்​பில் கூட்​டணி பேச்​சு​வார்த்​தைக் குழு அமைக்​கப்​பட்​டால், இத்​தகைய தேவையற்ற சலசலப்​பு​களை தவிர்க்​கலாம் என்றும் சிதம்​பர​ம் கூறிய​தாக​வும் பேசப்​படு​கிறது. தி​முக​வின் இந்த முடி​வால் அதன் கூட்​ட​ணி​யில் பெரிய மாற்​றங்​கள் ஏற்​ப​டாது என்​ப​தே அரசி​யல்​ விமர்​சகர்​கள்​ கருத்​தாக உள்​ளது.

SCROLL FOR NEXT