அசோக் நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன் பூ விற்கும் பெண்ணிடம் வாக்கு சேகரித்தார்.

 
தமிழகம்

தி.நகரில் குடிநீர் பிரச்சினை உள்ள இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படும்: திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன் வாக்குறுதி

செய்திப்பிரிவு

சென்னை: ​திநகரில் கோடை​க்காலத்​தில் குடிநீர் பிரச்சினை உள்ள இடங்​களில் மேல்​நிலை நீர்த்​தேக்க தொட்​டிகள் அமைத்து நிரந்தர தீர்வு காணப்​படும் என்று, திமுக வேட்பாளர் ராஜா அன்​பழகன் வாக்​குறுதி அளித்​தார்.

தி.நகர் தொகுதி திமுக வேட்​பாளர் ராஜா அன்​பழகன் நேற்று அசோக் நகர் பகு​தி​யில் எஸ்​.வி லிங்​கம் சாலை, ஒட்​டகப்​பாளை​யம், மஸ்​தான் அலி கார்​டன் உள்​ளிட்ட இடங்​களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்​தார்.

பெண்​களுக்கு ரூ.8 ஆயிரம் பரிசுக்​ கூப்​பன், மகளிர் உரிமைத்​தொகை ரூ.2 ஆயிர​மாக உயர்வு உள்​ளிட்ட திமுக தேர்​தல் வாக்​குறு​தி​களை எடுத்​துக்​கூறி பொது​மக்​களிடையே பிரச்​சா​ரம் செய்​தார்.

முன்​ன​தாக எஸ்​.​வி.லிங்​கம் சாலை நாகாத்​தமன் கோவில் பிரச்​சா​ரத்தை தொடங்கிய ராஜா அன்​பழகன் பேசும்​போது, "தி.நகரில் கோடை​க்காலத்​தில் குடிநீர்​ பிரச்​சினை ஏற்​படும் பகு​தி​களில் மேல்​நிலை நீர்த்​தேக்க தொட்​டிகள் அமைத்து மக்​களின் குடிநீர் தேவை நிரந்​தர​மாக பூர்த்தி செய்​யப்​படும்.

தொகு​தி​யில் உள்​கட்​டமைப்பு வசதி​கள் மேம்​படுத்​தப்​படும். இளைஞர்​களுக்கு வேலை​வா்ய்ப்​பு​கள் உரு​வாக்​கித் தரப்​படும்" என்​றார். பிரச்​சா​ரத்​தில் திமுக பகுதி செய​லா​ளர்​கள் கே. ஏழு​மலை, கோ. சு. மணி, தலைமை செயற்​குழு உறுப்​பினர் எம். எஸ். பழனி, தலைமை பொதுக்​குழு உறுப்​பினர் ஜெ. ஜானகி​ராமன் மற்​றும் கூட்​டணி கட்​சிகளின் நிர்​வாகி​கள், தொண்​டர்​கள்​ கலந்துகொண்​டனர்​.

SCROLL FOR NEXT