தமிழகம்

நோயாளிகளுக்கு ஜெனரிக் மருந்துகளையே பரிந்துரைக்க வேண்டும்: சுகாதார சேவைகள் இயக்ககம் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: மத்​திய அரசின் கீழ் செயல்​படும் மருத்​து​வ​மனை​களில் நோயாளி​களுக்கு ஜெனரிக் மருந்​துகளை மட்​டுமே பரிந்​துரைக்க வேண்​டும் என்று மத்​திய சுகா​தார சேவை​கள் தலைமை இயக்​ககம் அறி​வுறுத்​தி​யுள்​ளது.

இந்​திய மருத்​துவ கவுன்​சிலில் பதிவு செய்த அங்​கீகரிக்​கப்​பட்ட மருத்​து​வர்​களுக்​கான நெறி​சார் வழி​காட்​டு​தல்​கள் மற்​றும் விதி​களை தேசிய மருத்​துவ ஆணை​யம் 3 ஆண்​டு​களுக்கு முன்பு வெளி​யிட்​டது.

அதில் முக்​கிய​மாக, ‘ஜெனரிக் மருந்​துகளை (மூலப்​பெயர் கொண்ட மருந்​துகள்) மட்​டுமே மருத்​து​வர்​கள் பரிந்​துரைக்க வேண்​டும். இந்த விதியை மீறி​னால் சட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும்’ என்று மருத்​துவ ஆணை​யம் தெரி​வித்​திருந்​தது.

இதற்கு பல்​வேறு தரப்​பில் இருந்​தும் ஆட்​சேபம் எழுந்​தது. ‘ஜெனரிக் மருந்​துகளை பரிந்​துரை செய்​வ​தில் தவறில்​லை. ஆனால், அதன் தரத்தை எவ்​வாறு உறுதி செய்​வது என்று மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர். தரமற்ற மருந்​துகளால் பக்க விளைவு​கள் ஏற்பட வாய்ப்பு உள்​ளது என்று இந்​திய மருத்​துவ சங்​கம் (ஐஎம்ஏ) தெரி​வித்​தது.

நாடு முழு​வதும் உற்​பத்​தி​யாகும் அனைத்து மருந்​துகளின் தரத்​தை​யும் உறு​திப்​படுத்​து​வதை ஒழுங்​கு​முறை செய்த பிறகே, இந்த விதி​களை அமல்​படுத்த வேண்​டும் என்​றும் தெரிவிக்​கப்​பட்​டது. இக்​கோரிக்​கைகளை ஏற்ற மருத்​துவ ஆணை​யம், அந்த விதி​களை தற்​காலிக​மாக தள்​ளிவைப்​ப​தாக தெரி​வித்​தது.

இந்​நிலை​யில், மத்​திய அரசின் மருத்​து​வ​மனை​களுக்கு மத்​திய சுகா​தார சேவை​கள் தலைமை இயக்​ககம் தற்​போது அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​யில், ‘கடந்த 2023 வழி​காட்​டு​தல்​களைப் பின்​பற்றி மத்​திய அரசின் மருத்​து​வ​மனை​களில் நோயாளி​களுக்கு ஜெனரிக் மருந்​துகளை மட்​டுமே பரிந்​துரைக்க வேண்​டும்.

இதை மருத்​து​வ​மனை நிர்​வாகங்​கள் கண்​காணிக்க வேண்​டும். அதுதொடர்​பான அறிக்​கையை 3 மாதங்​களுக்கு ஒரு முறை சமர்ப்​பிக்க வேண்​டும்’ என்​று கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT