தமிழகம்

திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு: டிஜிபி அறிக்கை தாக்கல்

செய்திப்பிரிவு

சென்னை: திருவண்ணாமலை அருணாச்​சலேஸ்​வரர் கோயி​லில் கார்த்​திகை தீப திரு​விழாவை முன்​னிட்டு நெரிசலை தடுக்கவும் பக்தர்களுக்கு போது​மான அடிப்​படை வசதி​களை ஏற்​படுத்தித் தரவும் கோரி வழக்​கறிஞர் யானை ராஜேந்​திரன் சென்னை உயர் ​நீ​தி​மன்​றத்​தில் வழக்கு தாக்​கல் செய்​துள்​ளார்.

இந்த வழக்கு நீதிபதி பாலாஜி முன்பு விசா​ரணைக்கு வந்​த​போது, தமிழக டிஜிபி, திரு​வண்​ணா​மலை மாவட்ட எஸ்பி ஆகியோர் தரப்​பில் விரி​வான அறிக்கை தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: பக்​தர்​கள் வசதிக்​காக கடந்த ஆண்டு அறி​முகப்​படுத்​தப்​பட்ட உடனடி பாஸ் திட்​டம் நடப்​பாண்​டும் பின்​பற்​றப்​படும். தீப நிகழ்ச்​சியை பக்​தர்​கள் கண்​டு​களிக்க கோயி​லில் 26 இடங்​களில் எல்​இடி திரைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

15 ஆயிரம் போலீஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்பட உள்​ளனர். இந்து சமயம் மற்​றும் அறநிலை​யத்​ துறை மற்​றும் மாநக​ராட்சி நிர்​வாகம் உள்ளிட்ட துறை​களு​டன் இணைந்து பக்​தர்​களுக்கு தேவை​யான அடிப்​படை வசதி​கள் செய்​யப்​பட்​டுள்​ளன என்று கூறப்​பட்​டுள்​ளது. இதை பதிந்து கொண்ட நீதிப​தி, வி​சா​ரணை​யை நவ.27-ம்​ தேதிக்​கு தள்​ளி வைத்​துள்​ளார்.

SCROLL FOR NEXT