சபரிமலை அஞ்சல் நிலையத்தில் தபாலை உறவினருக்கு அனுப்பும் பக்தர். (உள்படம்) ஐயப்ப சுவாமி உருவத்துடன் கூடிய அஞ்சல் முத்திரை.

 
தமிழகம்

சபரிமலையில் ஐயப்ப சுவாமி முத்திரையிட்ட தபால்களை வாங்க பக்தர்கள் ஆர்வம்

என்.கணேஷ்ராஜ்

குமுளி: சபரிமலை அடி​வாரம் பம்பை நதிக்​கரை​யில் சபரிமலைக்​கான கிளை அஞ்​சல் நிலை​யம் செயல்​பட்டு வரு​கிறது. வனப் பகு​தி​யான இங்கு கோயில் திறக்​கப்​படும் நாட்​களில் மட்​டுமே இந்த அஞ்​சல் நிலை​யம் செயல்​படும். இதற்​கென பிரத்​யேக அஞ்​சல் குறி​யீட்டு எண் (689 713) ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

தற்​போது மண்டல பூஜை வழி​பாடு தொடங்​கி​யுள்ள நிலை​யில் இந்த அஞ்​சல​க​மும் செயல்​பாட்​டுக்கு வந்​துள்​ளது. இங்கு விற்​பனை செய்​யப்​படும் அஞ்​சல் அட்​டை, உள்​நாட்டு தபால், அஞ்​சல் உறை போன்​றவற்​றில் ஐயப்ப சுவாமி உரு​வம் ‘போஸ்ட் மார்க்’ எனும் முத்​திரை குத்​தப்​பட்டு வழங்​கப்​படு​கிறது.

அதில், யோகநிலை​யில் அமர்ந்த ஐயப்​பனின் உரு​வம் 18 படிகளு​டன் உள்​ளது. மண்​டல, மகர வழி​பாட்​டுக் காலங்​களில்​தான் இவற்​றைப் பெற முடி​யும் என்​ப​தால், பக்​தர்​கள் பலரும் தபாலை ஆர்​வத்​துடன் வாங்​கி, உறவினர்​களுக்​கு அனுப்​பு​கின்​றனர்.

இதுகுறித்து நிலைய அஞ்​சல் அதி​காரி ஷிபு வி.​நாயர் கூறிய​தாவது: இந்​தி​யா​வில் குடியரசுத் தலை​வர் மற்​றும் சபரிமலை ஐயப்​பனுக்கு மட்​டுமே பிரத்​யேக அஞ்​சல் குறி​யீட்டு எண் வழங்​கப்​பட்​டுள்​ளது.

பணப் பரிவர்த்​தனை​கள், பிர​சாத பார்​சல் புக்​கிங், மொபைல் ரீசார்ஜ் உள்​ளிட்ட வசதி​யும் இங்கு உள்​ளது. கோயில் நடை திறக்​கப்​பட்​ட​தில் இருந்து சுமார் ஆறா​யிரம் தபால் அட்​டைகள் விற்​பனை​யாகி​யுள்​ளன. மகர விளக்கு வழி​பாடு முடி​யும் வரை இந்த அஞ்​சல​கம் செயல்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT