தமிழகம்

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் அரசு அலு​வலர்​கள், ஆசிரியர்​களுக்கு அகவிலைப்​படி 2 சதவீதம் உயர்த்​தப்​படு​வ​தாக முதல்​வர் விஜய் அறி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மக்​கள் நலனை முன்​னிறுத்தி பல்​வேறு நலத்​ திட்​டங்​களை செயல்​படுத்த நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இந்த திட்​டங்​களை வடிவ​மைத்​து, அவற்றை முழு​வீச்​சில் நடை​முறைப்​படுத்​து​வ​தில் அரசு அலு​வலர்​கள், ஆசிரியர்​கள் முக்​கியப் பங்கு வகிக்​கின்​றனர். இந்த நிலையில், மத்​திய அரசுப் பணி​யாளர்​களுக்கு அகவிலைப்​படி கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் 2 சதவீத​ம் உயர்த்​தப்​பட்​டது.

அதைத் ​தொடர்ந்து, மாநில அரசு அலு​வலர்​கள், ஆசிரியர்​களும் பயன்​பெறும் வகை​யில், கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் கணக்​கிட்டு அகவிலைப்​படியை உயர்த்தி வழங்க உத்​தர​விடப்​பட்டுள்​ளது. அதன்​படி, தற்​போது 58 சதவீத​மாக உள்ள அகவிலைப்​படி 2 சதவீதம் உயர்ந்து இனி 60 சதவீத​மாக வழங்​கப்​படும்.

16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். இதன்மூலம் சுமார் 16 லட்​சம் அரசு அலு​வலர்​கள், ஆசிரியர்​கள், ஓய்​வூ​தி​ய​ர்கள், குடும்ப ஓய்​வூ​தி​யர்​கள் பயன்​பெறு​வார்​கள். இதனால், ஆண்​டுக்கு ரூ.1,230 கோடி தமிழக அரசுக்கு கூடு​தல் செல​வினம் ஏற்​படும்.

அரசு அலு​வலர்​கள், ஆசிரியர்​கள் நலன்​கருதி இதற்​கான கூடு​தல் நிதியை அரசு ஒதுக்​கீடு செய்​யும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது. தமிழ்​நாடு அரசு ஊழியர் அலு​வலர் ஒன்​றி​யத்​தின் தலை​வர் த.அமிர்​தகு​மார், தமிழ்​நாடு அரசு ஊழியர்​கள் ஆசிரியர்​கள் நல கூட்​டமைப்பு தலை​வர் சா.அருணன், தமிழக ஆரம்​பப்​பள்ளி ஆசிரியர் சங்​க பொதுச்​ செய​லா​ளர் ஜான் வெஸ்​லி, தமிழ்​நாடு ஆசிரியர் சங்​கத் தலை​வர் ராமஜெ​யம் உள்​ளிட்ட பல்​வேறு சங்​கத்தினர் இந்த அறி​விப்பை வரவேற்று, நன்​றி தெரி​வித்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT