தமிழகம்

சென்னையை நெருங்கியது ‘டிட்வா’ புயல்; திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு ‘ரெட் அலர்ட்’ - 1.24 கோடி பேருக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி

செய்திப்பிரிவு

சென்னை: வங்​கக் கடலில் நில​வும் `டிட்​வா' புயல் இன்று காலை சென்​னையை நெருங்கு​கிறது. இதையொட்​டி, திரு​வள்​ளூர், ராணிப்​பேட்டை மாவட்​டங்​களுக்கு `ரெட் அலர்ட்' விடுக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், தமிழகத்​தில் 1.24 கோடி பேருக்கு எச்​சரிக்கை குறுஞ்​செய்தி அனுப்​பப்​பட்​டுள்​ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்​குநர் செந்​தாமரைக்​கண்​ணன் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தென்​மேற்கு வங்​கக்​கடல், அதையொட்​டிய வடக்கு இலங்கை பகு​தி​களில் ‘டிட்​வா' புயல் நிலை கொண்​டுள்​ளது. இது மேலும் வடமேற்​காக நகர்ந்து இன்று (நவ.30) காலை வடதமிழகம் மற்​றும் அதையொட்​டிய தெற்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​களுக்கு அருகே நில​வக்​கூடும். இன்று மாலை புயல் சென்​னை​யை நெருங்​கி வரும்.

இதன் காரண​மாக, இன்று வட தமிழகத்​தில் பெரும்​பாலான இடங்​களி​லும், தென் தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி​யிலும் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். டெல்​டா, தென் தமிழக கடலோர மாவட்​டங்​கள், காரைக்​கால் பகு​தி​களில் மணிக்கு அதி​கபட்​சம் 75 கி.மீ. வேகத்​தில் பலத்த காற்று வீசக்​கூடும். வட தமிழக கடலோர மாவட்​டங்​கள், புதுச்​சேரி​யில் 80 கி.மீ. வேகத்​தில் தரைக்​காற்று வீசக்​கூடும்.

இன்று திரு​வள்​ளூர், ராணிப்​பேட்டை மாவட்​டங்​களில் அதி​க​னமழை (‘ரெட் அலர்ட்’) பெய்​யக்​கூடும். சென்​னை, காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, விழுப்​புரம், திரு​வண்​ணா​மலை, வேலூர், திருப்​பத்​தூர், கிருஷ்ணகிரி, தரு​மபுரி மாவட்​டங்​களில் கன முதல் மிக கனமழை​யும், சேலம், கள்​ளக்​குறிச்​சி, கடலூர் மாவட்​டங்​கள் மற்​றும் புதுச்​சேரி​யில் கனமழை​யும் பெய்ய வாய்ப்பு உள்​ளது. நாளை திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் கனமழை​யும், மற்ற பகு​தி​களில் மித​மான மழை​யும் பெய்ய வாய்ப்பு உள்​ளது.

தமிழக கடலோரப் பகு​தி​கள், குமரிக்​கடல், மன்​னார் வளை​குடா பகு​தி​களில் இன்று அதி​கபட்​ச​மாக 90 கி.மீ. வேகத்​தில் சூறாவளிக் காற்று வீசக்​கூடும்.

தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி வரையி​லான 24 மணி நேரத்​தில் பதி​வான மழை அளவு​களின்​படி அதி​கபட்​ச​மாக நாகை மாவட்​டம் கோடியக்​கரை​யில் 25 செ.மீ., வேதா​ரண்​யத்​தில் 19 செ.மீ., வேளாங்​கண்​ணி​யில் 13 செ.மீ., திருப்​பூண்​டி, நாகை​யில் 12 செ.மீ., தலை​ஞா​யிறில் 11 செ.மீ., ராம​நாத​புரம் மாவட்​டம் பாம்​பன், காரைக்​காலில் 10 செ.மீ., தங்​கச்​சிமடம், ராமேசுவரம், தொண்​டி, மண்​டபம், தூத்​துக்​குடி மாவட்​டம் காயல்​பட்​டினம், சிவகங்கை மாவட்​டம் இளை​யான்​குடி, நாகை மாவட்​டம் திருக்​கு​வளை​யில் 7 செ.மீ. மழை பதி​வாகி​உள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

1.24 கோடி பேருக்கு குறுஞ்​செய்தி: புயல், மழை பாதிப்​பு​கள், முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் தொடர்​பாக சென்னை எழில​கத்​தில் உள்ள மாநில அவசர​கால கட்​டுப்​பாட்டு மையத்​தில் நேற்று வரு​வாய்த் துறை அமைச்​சர் சாத்​தூர் ராமச்​சந்​திரன் ஆய்வு மேற்​கொண்​டார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

தாழ்​வான பகு​தி​களில் இருப்​பவர்​களைத் தங்​கவைக்க திருமண மண்​டபங்​கள், அவர்​களுக்​குத் தேவை​யான உணவு, குழந்​தைகளுக்கு பால் போன்​றவற்றை தயா​ராக வைக்​கு​மாறு அனைத்து மாவட்ட நிர்​வாகங்​களுக்​கும் உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. சென்​னை​யில் மாநில பேரிடர் மீட்​புப்​படை சார்​பில் 16 அணி​களும், தேசிய பேரிடர் மீட்​புப்​படை சார்​பில் 12 அணி​களும் தயார் நிலை​யில் உள்​ளன.

இது​வரை புயல், மழை​யால் பெரிய பாதிப்பு ஏற்​பட​வில்​லை. 16 கால்​நடைகள் இறந்​துள்​ளன. 24 குடிசைகள் சேதமடைந்​துள்​ளன. புயல் வந்​தால், அதை எதிர்​கொள்​வது தொடர்​பாக 1.24 கோடி பேருக்கு குறுஞ்​செய்தி மூலம் எச்சரிக்கை செய்தி அனுப்​பப்​பட்​டுள்​ளது. காற்​றின் வேகம் அதி​க​மாக இருக்​கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. எனவே, பொது​மக்​கள் யாரும் கடற்​கரை ஓரமாகச் செல்​வதை தவிர்க்க வேண்​டும். புயல் நேரத்தில் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்​வாறு அவர் கூறி​னார்.

4,000 கனஅடி வெளி​யேற்​றம்: சென்​னைக்கு குடிநீர் விநி​யோகிக்​கும் பூண்டி சத்​தி​யமூர்த்தி சாகர் நீர்த்​தேக்​கத்​தில் இருந்து நேற்று மாலை முதல் வி​நாடிக்கு 4,000 கனஅடி வீதம் உபரிநீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. அதே​போல, செம்​பரம்​பாக்​கம் ஏரியி​லிருந்​து 2,000 கனஅடி​யும்​, புழல்​ ஏரியி​லிருந்​து 1,500 கனஅடி​யும்​ உபரி நீர்​ வெளியேற்​றப்​பட்​டு வருகிறது.

SCROLL FOR NEXT