சென்னையில் நடந்த தமிழ்நாடு வெளிநாட்டு வேலைவாய்ப்பு இயக்கம் மற்றும் வேலை வழங்குவோர் கூட்டாண்மை மாநாட்டில் பங்கேற்ற வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் சுரேந்தர் பகத், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் கிராந்தி குமார் பாடி, தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஷனாஸ் இலியாஸ், புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு அலுவலர் (தமிழ்நாடு) ராஜ்குமார். | படம்: எஸ்.சத்தியசீலன் |

 
தமிழகம்

கம்போடியா, மியான்மர் செல்வோருக்கு ‘சைபர் ஸ்லேவரி' ஆபத்து: புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு அதிகாரி ராஜ்குமார் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: “வேலைக்​காகக் கம்​போடி​யா, லாவோஸ் மற்​றும் மியான்​மர் போன்ற நாடு​களுக்​குச் செல்​லும் இந்​திய இளைஞர்​கள், ‘சைபர் ஸ்லேவரி’ எனப்​படும் ஆபத்​தான இணைய அடிமைத்​தனத்​தில் திட்​ட​மிட்​டுச் சிக்க வைக்​கப்​படு​கிறார்​கள்” என புலம் பெயர்ந்தோர் பாதுகாப்பு அலுவலர் ராஜ்குமார் எச்​சரித்​துள்​ளார்.

சென்னை வெளி​நாட்டுக்​குச் செல்​வோர் பாது​காப்பு அதி​காரி அலு​வல​கம், மத்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சகம் மற்​றும் தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழகம் இணைந்து நடத்​தும், ‘தமிழ்​நாடு வெளி​நாட்டு வேலை​வாய்ப்பு மற்​றும் வேலை அளிப்​போர் கூட்​டாண்மை உச்சி மாநாடு’ சென்​னை​யில் நேற்று தொடங்​கியது.

          

இதில் தமிழகம் முழு​வ​தி​லும் உள்ள தொழில்​நுட்ப மற்​றும் தொழில்​முறை கல்வி நிறு​வனங்​களைச் சேர்ந்த சுமார் 1,000 மாணவர்​கள், சென்​னை​யில் உள்ள தூதரக அதி​காரி​கள், மத்​தி​ய-​மாநில அரசு அலு​வலர்​கள், வேலை அளிப்​போர் மற்​றும் ஆள்​சேர்ப்பு முகவர்​கள் கலந்து கொண்​டனர்.

நிகழ்ச்​சி​யில் புலம்​பெயர்ந்​தோர் பாது​காப்பு அதி​காரி ராஜ்கு​மார் பேசி​ய​தாவது: வெளி​நாடு​களுக்கு வேலைக்​குச் செல்​லும் இந்​தி​யர்​கள் பாது​காப்​பான வேலை​யைப் பெறு​வதை நாங்​கள் உறுதி செய்​கிறோம்.

இந்​தி​யா​வில் ‘இமிக்​ரேஷன்’ (Immigration) என்​பது மிக​வும் பிரபலம். ஆனால் ‘எமிக்​ரேஷன்’ என்​பது இந்​தி​யா​விலிருந்து வெளி​நாடு​களுக்கு வேலைக்​குச் செல்​பவர்​களைக் குறிக்​கும். எங்​கள் அலு​வல​கம் 1847-ம் ஆண்டு பிரிட்​டிஷ் ஆட்​சிக் காலத்​திலேயே தொடங்​கப்​பட்​டது.

மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சகத்​தால் அங்​கீகரிக்​கப்​பட்ட ஏஜென்ட்​கள் மூலம் மட்​டுமே வெளி​நாடு செல்ல வேண்​டும். இதை வலி​யுறுத்​தவே கடந்த ஆண்டு ‘பார்த்​துப் போங்க’ பிரச்​சா​ரத்​தைத் தொடங்​கினோம்.

குறிப்​பாக, கம்​போடி​யா, லாவோஸ், மியான்​மர் போன்ற நாடு​களில் படித்த இளைஞர்​கள் ‘சைபர் ஸ்லேவரி’ எனப்​படும் இணைய அடிமைத்​தனத​தில் சிக்க வைக்​கப்​படு​கிறார்​கள்.

கஸ்​டமர் கேர் வேலை என்று அழைத்​துச் செல்​லப்​பட்​டு, அவர்​கள் மூலம் மக்​கள் ஏமாற்​றப்​படு​கிறார்​கள். கடந்த ஓராண்​டில் இந்​தப் பிரச்​சா​ரத்​தின் மூலம் இத்​தகைய பாதிப்​பு​கள் கணிச​மாகக் குறைந்​துள்​ளன. இப்​போது ‘பார்த்​துப் போங்க 2.0’ திட்​டத்​தைத் தொடங்​கு​கிறோம்.

இதில் இன்​ஸ்​டாகி​ராமில் அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்ள சாட்​போட் மூலம் ‘Hi’ என்று மெசேஜ் செய்​தாலே அனைத்​துத் தகவல்​களை​யும் நீங்​கள் பெற்​றுக்​கொள்​ளலாம். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இந்த மாநாட்​டில், வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் சுரேந்தர் பகத், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநர் கிராந்தி குமார் பாடி, தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஷனாஸ் இலியாஸ் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்​.

SCROLL FOR NEXT