தமிழகம்

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான ‘கியூட்’ நுழைவுத் தேர்வு தொடங்கியது

முதல் நாளில் 1.24 லட்சம் பேர் பங்கேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: இளநிலை பட்​டப்​படிப்​பு​களுக்​கான கியூட் நுழைவுத் தேர்வு நாடு முழு​வதும் தொடங்​கியது. முதல் நாள் தேர்​வில் ஒரு லட்​சத்து 24 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் பங்​கேற்​றனர்.

நாடு முழு​வதும் உள்ள மத்திய அரசு பல்​கலைக்​கழகங்​கள் மற்​றும் அவற்​றின் கீழ் இயங்​கும் கல்​லூரி​களில் இளநிலை, முது​நிலை படிப்​பு​களில் சேர கியூட் எனப்​படும் பல்​கலைக்​கழக பொதுநுழைவுத் தேர்​வில் தேர்ச்சி பெற வேண்​டும்.

இத்​தேர்வை மத்திய அரசு சார்​பில் தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) நடத்தி வரு​கிறது. அந்த வகை​யில் 2026-2027-ம் கல்வி ஆண்டு சேர்க்​கைக்​கான இளநிலை பட்​டப்​படிப்பு கியூட் நுழைவுத்​தேர்வு மே 11 முதல் 31 வரை நடை​பெறும் என என்​டிஏ அறி​வித்​தது.

இதற்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு ஜனவரி 3-ல் தொடங்கி பிப்​ர​வரி 26-ம் தேதி முடிவடைந்​தது. இத்​தேர்​வுக்கு நாடு முழு​வதும் 15 லட்​சத்து 68 ஆயிரத்​துக்கு மேற்​பட்ட மாணவர்​கள் விண்​ணப்​பித்​தனர்.

அவர்​களுக்​கான ஹால் டிக்​கெட் மே 7-ந் தேதி இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்​யப்​பட்​டது. இந்​நிலை​யில், ஏற்​க​னவே அறி​வித்​த​படி கியூட் தேர்வு நேற்று தொடங்​கியது.

கணினி வழி​யில் நடத்​தப்​படும் இத்​தேர்வை சென்னை உள்பட இந்​தி​யா​வில் உள்ள முக்​கிய நகரங்​களி​லும், ஷார்​ஜா, அபு​தாபி, ரியாத், குவைத், மஸ்​கட், சிங்​கப்​பூர், கோலாலம்​பூர் உள்பட 14 சர்​வ​தேச நகரங்​களி​லும் ஒரு லட்​சத்து 25 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் எழு​தினர். இத்​தேர்வு மே 31-ம் தேதி முடிவடைகிறது.

SCROLL FOR NEXT