பெ.சண்முகம் | கோப்புப்படம் 
தமிழகம்

மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் மீது 8 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்: பெ.சண்முகம் கடும் கண்டனம்

செய்திப்பிரிவு

கள்​ளக்​குறிச்சி: மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் கள்​ளக்​குறிச்சி மாவட்​டச் செய​லா​ளர் உள்​ளிட்​டோரை தாக்​கிய சம்​பவத்​துக்கு கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் கள்​ளக்​குறிச்சி மாவட்​டச் செய​லா​ளர் ஜெயசங்​கர் மற்​றும் முன்​னாள் மாவட்​டச் செய​லா​ளர் ஏழு​மலை உள்​ளிட்​டோர் நேற்று முன்​தினம் உளுந்​தூர்​பேட்டை அடுத்த கிளியூர் கிராமம் நோக்கி காரில் சென்​றனர். கிளியூர் அரசுப் பள்ளி அருகே வந்​த​போது காரை வழிமறித்த ஒரு கும்​பல் கார் மீது தாக்​குதல் நடத்​தி​யதோடு, காரில் பயணித்த ஜெயசங்​கர் உள்​ளிட்ட நிர்​வாகி​களை தரக்​குறை​வாகப் பேசி தாக்​கினர். காரில் இருந்த கட்​சிக் கொடியை​யும் சேதப்​படுத்​தினர்.

இதுகுறித்து மாவட்​டச் செய​லா​ளர் ஜெயசங்​கர் களமருதூர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன்​பேரில் போலீ​ஸார் வடமாம்​பாக்​கம் பகு​தி​யைச் சேர்ந்த சரத்​கு​மார், சுந்​தரேசன், செல்​வகணப​தி, ஐயனார், அசோக்​கு​மார், பன்​னீர்​செல்​வம் உள்​ளிட்ட 8 பேர் மீது வழக்​குப்​ப​திவு செய்து அசோக்​கு​மாரை கைது செய்​தனர். தலைமறை​வாக உள்ள மற்​றவர்​களை தேடி வரு​கின்றனர்.

இச்​சம்​பவத்​துக்கு கண்​டனம் தெரி​வித்து கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் வெளி​யிட்ட அறிக்​கை: வடமாம்​பாக்​கம் கிராமத்​தைச் சேர்ந்த 8 பேர் கொண்ட கும்​பல் கட்சி தலை​வர்​களை கொலை​வெறியேடு தாக்​கி​யுள்​ளனர். இது வன்​மை​யாக கண்​டிக்​கத்​தக்​கது.

வடமாம்​பாக்​கம் கிராமத்​தின் முன்​னாள் ஊராட்​சிமன்ற தலை​வர், ‘பிரதமர் வீடு கட்​டும் திட்​டத்​தின்’ கீழ் 22 வீடு​களை கட்​டா​மலே அவராகவே பணத்தை எடுத்​துக் கொண்டு மக்​களை ஏமாற்​றி உள்ளார். இதற்கு எதி​ராக மார்க்​சிஸ்ட் கட்​சி​யினர் தொடர்ந்து போராடி வந்தனர்.

இதை மனதில் வைத்​துக் கொண்​டு, ஆத்​திரமடைந்த முன்​னாள் ஊராட்​சிமன்ற தலை​வரின் மகன்​கள் இரு​வர் உள்பட8 பேர் திட்​ட​மிட்டு இந்த வன்​முறை மற்​றும் கொலை​வெறி தாக்​குதலில் ஈடு​பட்​டுள்​ளனர்.

இச்​சம்​பவம் குறித்து காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டும் இது​வரை ஒரு​வர் மட்​டுமே கைது செய்​யப்​பட்​டுள்​ளார். இந்​தத் தாக்​குதலில் சம்​பந்​தப்​பட்ட அனைத்து குற்​ற​வாளி​களை​யும் காவல்​துறை உடனடி​யாக கைது செய்ய வேண்​டும்.

SCROLL FOR NEXT