தமிழகம்

தென் மாநிலங்களுக்கு துரோகம் இழைக்கும் அதிமுக: கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

செய்திப்பிரிவு

தொகுதி மறுவரையறை திட்​டத்தை ஆதரித்து தென் மாநிலங்​களுக்கு அதி​முக துரோகம் இழைப்​ப​தாக மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன் விமர்​சித்​துள்​ளார்.

சென்னை சைதாப்​பேட்​டை​யில் அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யனை ஆதரித்​து, கே.​பாலகிருஷ்ணன் நேற்று பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: தேர்தல் பணிகளுக்கு இடையிலேயே ஒரு தீமூட்​டுகிற போராட்​டத்தை நடத்த வேண்டிய கட்டா​யத்தை பிரதமர் மோடி உருவாக்​கி​விட்​டார்.

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இது ஒரு கருப்பு தினம். அவசர அவசரமாக, அரசியல் ஆதாயத்​துக்காக நாடாளு​மன்​றத்தை அவசரமாகக் கூட்டி ஒரு மோசமான சதித் திட்டத்தை பிரதமர் மோடி நிறைவேற்ற உள்ளார். கேட்டால், நாங்கள் மகளிருக்கான இட ஒதுக்​கீட்டை நிறைவேற்றப் போகிறோம் என்று கூறுகி​றார்​கள்.

ஆனால், மகளிருக்​கான இட ஒதுக்​கீடு என்ற போர்​வை​யில் தொகுதி மறு​வரையறை சட்​டத்தை பிரதமர் மோடி நிறை​வேற்ற இருக்​கி​றார். இதனால் நாடாளு​மன்ற உறுப்​பினர்​களின் எண்​ணிக்கை 543-லிருந்து 850 ஆக உயர்த்​தப்​படும்.

இதன்​மூலம் வட மாநிலங்​களின் நாடாளு​மன்ற தொகு​தி​களின் எண்​ணிக்கை உயர்​வதுடன், தென் மாநிலங்​களில் அதன் எண்​ணிக்கை கணிச​மாக குறை​யும். இப்​படி நடந்​தால் பரம்​பரை பரம்​பரை​யாக தமி​ழ​க​மும், தென் மாநிலங்​களும் புறக்​கணிக்​கப்​படும். இந்​தி​யா​வில் வடக்​கு, தெற்கு என்று பிரி​வினை உரு​வாகும்.

இந்த திட்​டத்தை ஆதரித்து தமி​ழ​கத்​துக்கு மட்​டுமின்​றி, தென் மாநிலங்​களுக்கே அதி​முக துரோகம் இழைக்​கிறது. அனைத்​தை​யும் மீறி இந்​தச் சட்​டம் நிறை​வேற்​றப்​படு​மா​னால், ஆங்​கிலேயர்​களுக்கு எதி​ரான போராட்​டத்​தைப் போல மிகப்​பெரிய போராட்​டத்தை இந்​தியா எதிர்​கொள்​ளும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

SCROLL FOR NEXT