தமிழகம்

மேகமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: மேகமலை புலிகள் காப்​பகப் பகு​தி​யில் பல தலை​முறை​களாக வாழ்ந்து வரும் பழங்​குடி​யின மக்​களை ஆக்​கிரமிப்​பாளர்​கள் என முத்​திரை குத்​தக் கூடாது.

இந்த விவ​காரத்​தில் உச்ச நீதி​மன்​றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு தாக்​கல் செய்ய வேண்​டும் என்று இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஸ்ரீவில்​லிபுத்​தூர் மேகமலை புலிகள் காப்​பகப் பகு​தி​யில் பல தலை​முறை​களாக வாழ்ந்து வரும் பழங்​குடி​யினர் மற்​றும் பாரம்​பரிய​மாக வனம் சார்ந்து வாழும் மக்​களை, புலிகள் பாது​காப்பு என்ற பெயரில் அங்​கிருந்து ஒரேயடி​யாக வெளி​யேற்​றும் வகை​யில் உச்ச நீதி​மன்​றத்​தின் 2 நீதிப​தி​கள் அமர்வு பிறப்​பித்​துள்ள உத்தரவு கவலைக்​குரியது.

மேகமலை பகு​தி​யில் 5,072 ஹெக்​டேர் பரப்பை 4,601 பேர் ஆக்​கிரமித்​துள்​ள​தாக நீதி​மன்​றப் பதி​வில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. இவர்​களில் 1,595 பேர் நிரந்தர வீடும், காடு சார்ந்த வாழ்​வா​தா​ர​மும் கொண்​ட​வர்​கள், 233 பேர் தற்​காலிக வீடும், காடு சார்ந்த வாழ்​வா​தா​ரம் கொண்​ட​வர்​கள், 2,773 பேர் காட்​டில் விவ​சா​யத்தை மட்​டுமே சார்ந்​தவர்​கள் என தமிழக அரசு வகைப்​படுத்​தி​யுள்​ளது.

இவர்​களை ஆக்​கிரமிப்​பாளர்​கள் என்று முத்​திரை குத்​தக்​கூ​டாது. வறுமை​யிலும் வாழ்​வா​தா​ரப் பாது​காப்பு இல்​லாமல் காடு​களைச் சார்ந்​து,தலை​முறை தலை​முறை​யாக வாழும் மக்​கள் ஆவர்.

வன உரிமை​கள் சட்​டம் வழங்​கி​யுள்ள உரிமை​களை முழு​மை​யாகக் கண்​டறிந்​து, சரி​பார்த்​து, அங்​கீகரிக்​கும் முன்​பாக மக்​களை வெளி​யேற்​று​வது சட்​டத்​தின் அடிப்​படை நோக்​கத்​தையே புறக்​கணிப்​ப​தாகும்.

பழங்​குடி​யினர் மற்​றும் பாரம் ​பரிய​மாக வனம் சார்ந்து வாழும் மக்​களின் உரிமை​களும், சுற்​றுச்​சூழல் பாது​காப்​பும் ஒன்​றுக்கு ஒன்று எதி​ரானவை அல்ல. எனவே, தமிழக அரசு உடனடி யாக சீராய்வு மனு தாக்​கல் செய்ய வேண்​டும்.

வன உரிமை​கள் சட்​டத்​தின்​ கீழ் அனைத்து தனி​நபர் மற்​றும் சமூக உரிமை​களை​யும் முதலில் முழு​மை​யாகக் கண்​டறிந்து அங்​கீகரிக்க வேண்​டும். அது​வரை கட்​டாய வெளி​யேற்​றத்தை நிறுத்த வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT