தமிழகம்

விஜய் மீது நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூ. வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: தவெக தலைவர் விஜய், தனது கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும் போது, “தேர்தல் நேரத்தில் ரூ.1000, 2 ஆயிரம், 5 ஆயிரம் கொடுத்தால் பணத்தை வாங்கிக் கொண்டு, அவர்கள் காதில் விசிலை ஊதி அனுப்புங்கள்.” என்று பேசியிருப்பது தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் அனைத்தையும் அப்பட்டமாக மீறிய செயலாகும்.

விதிமுறைகளை மீறியுள்ள விஜய் மீது, தேர்தல் ஆணையம் தானே முன் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

          
SCROLL FOR NEXT