இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்

 
தமிழகம்

சாதிய படு​கொலையை தடுக்க சிறப்பு சட்​டம்: இந்திய கம்யூ. தேர்தல் அறிக்கை வெளியீடு

செய்திப்பிரிவு

தி​முக கூட்​ட​ணி​யில் உள்ள இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி வரும் சட்​டப் பேரவை தேர்​தலில் 5 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது. இந்​நிலை​யில், கட்​சி​யின் தேர்​தல் அறிக்கை தி.நகரில் நேற்று வெளி​யிடப்​பட்​டது. கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் தேர்​தல் அறிக்​கையை வெளி​யிட்​டார். முதல் பிர​தியை கட்​சி​யின் மாநில துணைச் செய​லா​ளர் நா.பெரிய​சாமி பெற்​றுக்​கொண்​டார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் மு.வீர​பாண்​டியன் கூறிய​தாவது: இந்த தேர்​தல் அறிக்​கை​யில் 47 தலைப்​பு​களில் 302 அம்ச செயல் திட்​டத்தை முன்​வைத்​திருக்​கி​றோம். அதன்​படி அனைத்து தொழில்​களுக்​கும் குறைந்த கட்​ட​ணத்​தில் மின்​சா​ரம் வழங்​குதல், தனி​யார்​மயப்​படுத்​தலை தவிர்த்​து, பொதுத்​துறை மின்​வாரிய அமைப்பை வலுப்​படுத்​துதல், தொழில்​களுக்கு நிலம் கையகப்​படுத்​தும் போது நியாய​மான இழப்​பீட்டை வழங்​குதல், ஐடிஐ, பாலிடெக்​னிக், தொழிற்​ப​யிற்சி மையங்​களை தொழில்​துறை​யுடன் இணைத்து இளைஞர்​களுக்கு நேரடி வேலை​வாய்ப்பு பயிற்சி வழங்​குதல், அனைத்து மாவட்​டங்​களி​லும் அரசு மருத்​துவ கல்​லூரி​களை தொடங்​குதல் உள்​ளிட்​டவை நிறை​வேற்​றப்பட வேண்​டும்.

          

அதே​போல் தொழில்​முனை​வோர் மேம்​பாட்​டுக்​காக ஆணை​யம் அமைத்​தல், தென் மாவட்​டங்​கள், பின் தங்​கிய மாவட்​டங்​களில் தொழிற்​பேட்​டைகள், குறைந்​த​பட்ச ஊதி​ய​மாக ரூ.25 ஆயிரம், நிரந்தர வேலை, பாது​காப்​பான பணி, ஒப்​பந்த வேலை முறையை கைவிடு​தல், பாசன வசதியை மேம்​படுத்​துதல் ஆகியவை வலி​யுறுத்​தப்​படும்.

சாதிய படு​கொலையை தடுக்க சிறப்பு சட்​டம், கல்​வி, அரசு வேலை​களில் உள்ள ஒதுக்​கீட்டை முழு​மை​யாக கடை​பிடித்​தல், மத்​திய அரசின் புதிய தொழி​லா​ளர் சட்ட தொகுப்​பு​களை செயல்​படுத்த மாட்​டோம் என அறி​வித்​தல், விவ​சா​யி​களின் வங்கி கடன்​களை ரத்து செய்​தல், விளைபொருட்​களுக்கு குறைந்​த​பட்ச ஆதார விலையை நிர்​ண​யித்​தல், மீன்​பிடி தடை​காலத்​துக்கு மாதம் ரூ.15 ஆயிரம் நிவாரணம், அனைத்து மாவட்​டங்​களில் மது போதை மீட்பு மையங்​கள், மது​விற்​பனையை படிப்​படி​யாகக் குறைத்​து, பூரண மது​விலக்கை அமல்​படுத்​துதல், பழங்​குடி மக்​களுக்கு தனி நலத்​துறை உள்​ளிட்​டவை இதில் இடம்​பெற்​றுள்​ளன. இவ்​வாறு அவர் பேசி​னார்.

20 நாட்​கள் சுற்​றுப்​பயணம்: இதற்​கிடையே, மு.வீர​பாண்​டியன்​ நாளை (ஏப்​.2) முதல் தேர்​தல் பிரச்​சார சுற்​றுப்​பயணத்தை தொடங்​கு​கி​றார். ராஜ​பாளை​யம் தொகு​தி​யில் ஆரம்​பித்​து, ஏப்.3 கோவில்​பட்​டி​யிலும், ஏப்​.4, 5-ம் தேதி​களில் சென்​னை​யிலும் அவர் திமுக கூட்​ட​ணிக்​காக வாக்கு சேகரிக்க உள்​ளார்.

தொடர்ந்து ஏப்.6 செங்​கல்​பட்​டிலும், ஏப்.7 திண்​டிவனத்​தி​லும் பிரச்​சா​ரம் செய்​கி​றார். 20 நாட்​களுக்கு பல தொகு​தி​களில் பிரச்​​சா​ரம் செய்ய உள்ள அவர், ஏப். 20, 21 தேதி​களில் சென்​னை​யில் பிரச்​​சா​ரத்தை நிறைவு செய்​கிறார்​.

SCROLL FOR NEXT