தமிழகம்

மனமகிழ் மன்றங்களில் ஆய்வு என்ற பெயரில் தவெகவினர் ‘ரீல்ஸ்’ எடுப்பதை தடுக்க கோரி நீதிமன்றத்தில் மனு

செய்திப்பிரிவு

மதுரை: தமிழகத்​தில் மனமகிழ் மன்​றங்​களில் தவெக​வினர் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் எடுத்து சமூக வலை தளங்​களில் பதி​விடு​வதைத் தடுக்​கக்​கோரிய வழக்​கில் எம்​.பி., எம்​எல்ஏக்கள், கவுன்​சிலர்​களுக்கு ஆய்வு நடத்த அதி​காரம் உண்டா என்​பதை தெரிவிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

தமிழ்​நாடு மனமகிழ் மன்ற உரிமை​யாளர் சங்​கத் தலை​வர் வீர​பாண்​டியன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: எங்​கள் சங்க உறுப்​பினர்​கள் தமிழ்​நாடு முழு​வதும் அரசிடம் முறை​யாக எப்​எல்-2 உரிமம் பெற்று மனமகிழ் மன்​றங்​களை நடத்தி வரு​கிறார்​கள். மன்ற உறுப்​பினர்​களுக்கு மது விற்​பனை செய்து வரு​கிறோம். மனமகிழ் மன்​றங்​களின் நடவடிக்​கையை அதி​காரி​கள் கண்​காணிக்​கின்​றனர்.

ஆனால், ஆளும் கட்சி எம்​எல்​ஏக்​கள், ஆளும் கட்சி நிர்​வாகி​கள், சமூக ஆர்​வலர்​கள், யூடியூப் செயற்​பாட்​டாளர் என்ற பெயரில் மனமகிழ் மன்​றங்​களுக்​குள் அத்​து​மீறி நுழைந்து செல்​போனில் வீடியோ பதிவு செய்​கின்​றனர். பின்​னர் சட்​ட​விரோத​மாக மது விற்​பனை நடை​பெறு​வ​தாக சித்​தரித்து சமூகவலை தளங்​களில் வீடியோக்​களை பதிவேற்​றம் செய்​கின்​றனர்.

இவர்​கள் மனமகிழ் மன்​றங்​களில் மது அருந்​தும் உறுப்​பினர்​களின் அடை​யாளம் தெரி​யு​மாறு வீடியோ ரீல்​ஸ்​கள் எடுத்​துப் பரப்​பு​கின்​றனர். மது அருந்​து​வோர், ஊழியர்​களு​டன் தகராறு செய்​கின்​றனர். வீடியோக்​களை காட்டி மனமகிழ் மன்ற உரிமை​யாளர்​களிடம் பணம் கேட்டு மிரட்​டு​கின்​றனர். விருதுநகர் மாவட்​டம் கூமாபட்டி மற்​றும் திருச்சி மாவட்​டங்​களில் மனமகிழ் மன்​றங்​களில் ஆளும் கட்சி நிர்​வாகி​கள் ஆய்வு என்ற பெயரில் நுழைந்து தேவையற்ற பிரச்​சினை​களைச் செய்​துள்​ளனர். மனமகிழ் மன்​றத்​துக்​குள் அத்​து​மீறி நுழைந்து ரீல்ஸ் எடுத்து சமூக வலை​தளங்​களில் பரப்​புவ​தால் தொழில் பாதிக்​கப்​படு​கிறது.

எனவே, தமிழகம் முழு​வதும் மனமகிழ் மன்​றங்​களின் உரிமை​களைப் பாது​காக்க உரிய நடவடிக்கை எடுக்​கு​மாறு மது​விலக்கு மற்​றும் ஆயத்​தீர்வை ஆணை​யருக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு அந்த மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

மனுவை நீதிபதி பரதசக்​கர​வர்த்தி விசா​ரித்​தார். மனு​தா​ரர் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் வீர.க​திர​வன், வழக்​கறிஞர் பாஷி​யம் வாதிட்​டனர். பின்​னர் நீதிப​தி, மனமகிழ் மன்​றங்​களில் சோதனை நடத்த எம்​.பி. எம்​எல்​ஏக்​கள், கவுன்​சிலர்​களுக்கு அதி​காரம் உண்டா என்​ப​தைத் தெரிவிக்க வேண்​டும். மனமகிழ் மன்​றங்​களில் ரீல்ஸ் எடுக்​கக் கூடாது என உத்​தர​விட்டு விசா​ரணையை தள்​ளி​வைத்​தார்.

SCROLL FOR NEXT