அஜித்​கு​மார், நிகி​தா

 
தமிழகம்

நகை திருடியதாக புகார் அளித்த பெண் மார்ச் 4-ம் தேதி ஆஜராக மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

மதுரை: மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் மீது நகை திருட்டு புகார் அளித்த பெண் மார்ச் 4-ம் தேதி ஆஜராகு​மாறு மதுரை மாவட்ட நீதி​மன்​றம் நோட்​டீஸ் அனுப்பி உள்​ளது.

மடப்​புரம் காளி​யம்​மன் கோயில் காவலாளி அஜித்​குமார், நகை திருட்டு வழக்கு விசா​ரணைக்​காக தனிப்​படைக் காவலர்​களால் அழைத்​துச் செல்​லப்​பட்​டார். அப்​போது காவலர்​கள் தாக்​கிய​தில் அஜித்​கு​மார் உயி​ரிழந்​தார்.

          

இந்த வழக்​கில் தனிப்​படைக் காவலர்​கள் 6 பேர் கைது செய்​யப்​பட்​டனர். இந்த வழக்​கில் தனிப்​படைக் காவலர்​கள் ஜாமீன் கோரி தாக்​கல் செய்த மனு, கடந்த வாரம் உயர் நீதி​மன்​றத்​தில் விசா​ரணைக்கு வந்​தபோது, அஜித்​கு​மார் மீது நிகிதா என்​பவர் அளித்த நகை திருட்டு புகாரில் உண்மை இல்லை என்று விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ள​தாக​வும், இது தொடர்​பாக விரை​வில் நீதி​மன்​றத்​தில் அறிக்கை தாக்​கல் செய்​யப்​படும் எனவும் சிபிஐ தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

இதையடுத்து நீதிப​தி, “செய்​யாத குற்​றத்​துக்​காக ஒரு​வரை போலீ​ஸார் அடித்தே கொலை செய்​துள்​ளனர். போலீ​ஸாருக்கு தக்க பாடம் கற்​பிக்க வேண்​டும். விசா​ரணை முடி​யும் வரை காவலர் சிறை​யிலேயே இருக்​கட்​டும்” என்று கூறி, “பொய் புகார் அளித்த பெண் மீது என்ன நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது?” என சிபிஐ​யிடம் கேள்வி எழுப்​பி​யிருந்​தார்.

இந்​நிலை​யில், அஜித்​கு​மார் காவல் மரண வழக்கை விசா​ரித்​து​வரும் மதுரை மாவட்ட நீதி​மன்​றத்​தில், நகை திருட்டு புகார் அளித்த நிகி​தாவை அழைத்து விசா​ரிக்க அனு​மதி கோரி, சிபிஐ தரப்​பில் மனு தாக்கல் செய்​யப்​பட்​டது. இந்த மனுவை மதுரை மாவட்ட தலைமை குற்​ற​வியல் நீதி​மன்ற நீதிபதி செல்​வ​பாண்டி விசா​ரித்​து, மார்ச் 4-ம் தேதி நிகிதாநீதி​மன்​றத்​தில் ஆஜராக நோட்​டீஸ் அனுப்ப உத்​தர​விட்​டார்.

SCROLL FOR NEXT