தமிழகம்

ஊழலற்ற தமிழகம் உருவாவதே முழு சுதந்திரம்: சுதந்திர தின உரையில் முதல்வர் விஜய் உறுதி

“அரசுக்கு எதிரான சதிகளை முறியடிப்போம்”

செய்திப்பிரிவு

சென்னை: ‘‘லஞ்​சம், ஊழலற்ற தமிழகத்தை உரு​வாக்​கு​வது​தான் முழு​மை​யான சுதந்​திரம்’’ என்று கோட்​டை​யில் தேசி​யக் கொடியேற்றி தனது சுதந்​திர தின உரை​யில் முதல்​வர் விஜய் உறு​தி​யாகத் தெரி​வித்​தார்.

தமிழகத்தில் முதல்​வர் பதவி​யேற்​றப் பிறகு கோட்​டையில் முதல்​வர் விஜய் முதல் முறையாகத் தேசி​யக் கொடியேற்றி உரை​யாற்​றி​னார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: நம்மை அடிமை​யாக வைத்​திருக்​கிறார்​கள் என்று தெரிந்​தாலே மக்​கள் மத்​தி​யில் ஒரு ஒற்​றுமை ஏற்​படும்.

அனை​வரும் ஒரே மாதிரி சிந்​தித்து ஒன்று சேரு​வார்​கள். அவ்​வாறு ஒன்று சேரும் இடத்​தில்​தான் சாதி, மதம், மொழி, இனம் ஆகிய அனைத்​தும் உடைந்து நொறுங்​கும். அது​தான் உண்​மை​யான சுதந்​திரம். அப்​படி​தான் மகாத்மா காந்தி தலை​மை​யில் 1947-ல் இதே நாளில் நமக்கு சுதந்​திரம் கிடைத்​தது. அதைப் பின்​பற்றி படிப்​படி​யாக நாம் முன்​னேறி வரு​கிறோம்.

தற்​போது தமிழகத்தை லஞ்​சம், ஊழலில் இருந்து காப்​பாற்​று​வதே மிகப்​பெரிய ஒரு விடு​தலைக்​குச் சமமான விஷ​யம்​தான். அதை நோக்​கி​தான் நமது அரசும் செயல்​பட்டு வரு​கிறது. பொது வாழ்​வில் சமரசம் இருக்​கக் கூடாது.

மக்​கள் நலன்​தான் முக்​கிய​மானது. அந்த அடிப்​படை​யில்​தான் மக்​கள் நலன் சார்ந்த திட்​டங்​களில், மத்​திய அரசுடன் நிர்​வாக ரீதி​யாக ஒத்​துழைப்​புடன் இருக்​கிறோம். அதேவேளை​யில், மாநில உரிமை​களுக்​கும், தமிழகத்​துக்​கும் எதி​ரான கொள்கை முடிவு​களை தவெக அரசு கடுமை​யாக எதிர்க்​கும். அதில் மாற்​றுக் கருத்தே இல்​லை.

நல்ல திட்​டங்​கள் தொடரும்: முந்​தைய அரசுகள் கொண்டு வந்த நல்ல திட்​டங்​கள் தொடர்ந்து செயல்​படுத்​தப்​படும். அந்த வகை​யில், முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா கொண்டு வந்த ‘அம்மா உணவகம்’ திட்​டம் மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

பள்​ளி​களில் காலை உணவுத் திட்​டம் 6 முதல் 8-ம் வகுப்​பு​களுக்கு விரிவுபடுத்​தப்​படு​கிறது. இதுத​விர ஆட்​சிக்கு வந்த 3 மாதங்​களில் பல்​வேறு திட்​டங்​களைச் செயல்​படுத்தி உள்​ளோம். அதன்​படி விவ​சா​யிகளின் ரூ.5,932 கோடி பயிர்க்​கடன் தள்​ளு​படி செய்​யப்​பட்​டுள்​ளது. குறுவை சாகுபடி தொகுப்பு திட்​டத்​துக்கு ரூ.134 கோடி வழங்​கப்​பட்​டுள்​ளது.

அரசு மருத்​து​வ​மனை​களில் பிறக்​கும் குழந்​தைகளுக்கு ஒரு கிராம் தங்​கம் வழங்​கும் தாய் மாமன் தங்க மோதிரத் திட்​டம் ரூ.755 கோடி​யில் தொடங்​கப்பட உள்​ளது.

லஞ்​சம் மற்​றும் ஊழலைத் தடுக்க பிரத்​யேக வாட்ஸ் அப் எண் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. வரு​வாய்த் துறை சான்​றிதழ்​கள் 15 நாட்​களுக்​குள் வழங்​கப்​படு​வதுடன், கோயில் நிலங்​கள் குறித்த விவரங்​கள் இணை​யதளத்​தில் பதிவேற்​றப்​பட்​டுள்​ளன.

சுதந்​திரப் போராட்ட வீரர்​கள் தியாகத்​தால் கிடைத்த சுதந்​திரம், சிலருக்​கான​தாக மட்​டும் இல்​லாமல் அனை​வருக்​கும் கிடைப்​பதை உறுதி செய்ய வேண்​டும்.

தமிழகத்தை இந்​தி​யா​வின் முன்​மா​திரி மாநில​மாக​வும், 2036-ம் ஆண்​டுக்​குள் தமிழக பொருளா​தா​ரத்தை 1.5 டிரில்​லியன் டால​ராக​வும் உயர்த்த நாம் உறுதி ஏற்​போம். மக்​கள் அரசோடு இணைந்து நிற்க வேண்​டும். மக்​கள்​தான் ஆட்​சி​யாளர்​கள். நான் உட்பட இங்​குள்ள அனை​வரும் மக்​களின் சேவகர்​கள்​தான். அரசுக்கு எதி​ரான சதி​களை முறியடித்​து, நல்​லதை மட்​டுமே நோக்கி நகர்​வோம்.

ஊழலற்ற அரசை உரு​வாக்​கும் பணி​களை நாங்​கள் முழு வீச்​சில் மேற்​கொண்டு வரு​கிறோம். ஊழலைச் சிறிதும் சகித்​துக் கொள்​ளாத மனநிலையை நம் மக்​கள் கொண்​டிருக்க வேண்​டும், நமது மாநிலத்தை ஊழலற்​ற​தாக மாற்​று​வதற்கு அதி​காரி​கள், மக்​கள் அனை​வரும் துணை நிற்க வேண்​டும் இவ்​வாறு முதல்​வர் விஜய் பேசி​னார்.

இதையடுத்​து, தகை​சால் தமிழர் விருது, ஏ.பி.ஜே.அப்​துல் கலாம் விருது, கல்​பனா சாவ்லா விருது உட்பட பல்​வேறு விருதுகளை​யும் முதல்​வர் விஜய் வழங்​கி​னார். விரு​தாளர்​களு​டன் குழுப் புகைப்​பட​மும் முதல்​வர் விஜய் எடுத்​துக் கொண்​டார்.

மாற்​றுத் திற​னாளி குழந்​தைகளுக்கு முதல்​வர் விஜய் இனிப்​பு​களை வழங்கி சுதந்​திர தின வாழ்த்​துக்​களைத் தெரி​வித்​துக் கொண்​டார். விழாவை முடித்​து​விட்டு வீட்​டுக்​குக் கிளம்​பிய முதல்​வர் விஜய்​, சாலை​யில்​ சிறிது தூரம்​ நடந்​து சென்​றபடியே பொது​மக்​களைப்​ பார்த்​து வாழ்த்​துகளைத்​ தெரி​வித்​த​படியே கையசைத்​து சென்​றார்​.

சுதந்திர தின சிறப்பு அறிவிப்புகள்: தமிழக முதல்வர் விஜய் நேற்று தனது சுதந்திர தின உரையில் பேசும் போது 5 அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, முன்னாள் படை வீரர்களின் 2 மகள்களுக்கு வழங்கப்படும் திருமண நிதியுதவி ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாகவும், மாற்றுத்திறன் கொண்ட முன்னாள் படை வீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கான மாதாந்திர நிதியுதவி ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாகவும், விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.23 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.12,500 ஆகவும், வீரபாண்டிய கட்டபொம்மன், முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, மருது சகோதரர்கள் மற்றும் வ.உ.சிதம்பரனார் ஆகியோரின் வழித்தோன்றல்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.11,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர், என்.ஆனந்த் உள்ளிட்ட அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

நடிகை த்ரிஷா பங்கேற்பு: சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷா, தனது தாயார் உமா கிருஷ்ணனுடன் பங்கேற்றார். மஞ்சள் புடவையில் வந்த த்ரிஷாவுக்கு, அமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் முதல் வரிசையில் முதல்வர் விஜய்யின் பெற்றோருக்கு அருகிலேயே இருக்கை தரப்பட்டிருந்தது. மேலும், முதல்வர் விஜய்யின் பெற்றோர் சந்திரசேகர், ஷோபா மற்றும் குடும்பத்தினரும் விழாவில் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT