தமிழகம்

கல்லூரிக் கல்வி ஆணையர் முனைவர் பட்டத்துக்கு விண்ணப்பித்ததில் சர்ச்சை

செய்திப்பிரிவு

திருச்சி: உயர்கல்வி துறையின்கீழ் இயங்கும் கல்லூரிக் கல்வி ஆணையரான இ.சுந்தரவல்லி ஐஏஎஸ், பார​தி​தாசன் பல் கலைக்​கழகத்​தில் முனை​வர் பட்​டம் பெறுவதற்கு விண்ணப்பித்த விவ​காரம் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​உள்​ளது.

திருச்சி பார​தி​தாசன் பல்​கலைக்​கழகத்​தில் துணைவேந்​தர் பதவி காலி​யாக இருப்​ப​தால், துணைவேந்​தர் வழி​காட்​டும் குழு உறுப்​பின​ராக​வும் இவர் உள்​ளார். இந்​நிலை​யில், ஜன.10-ம் தேதி திருச்சி பார​தி​தாசன் பல்​கலைக்​கழகத்​தில் உடற்​கல்​வி- யோகா பிரி​வில் முனை​வர் பட்​டம் பெற விண்​ணப்​பித்​துள்​ளார். நுழைவுத்​தேர்வு எழுதி தேர்​வாகாததால் அவரது விண்​ணப்​பம் நிராகரிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், அவர் முனை​வர் பட்​டத்​துக்கு விண்ணப்​பித்​தது சர்ச்​சை​யாகி உள்​ளது. இதுகுறித்து பல்​கலைக்​கழக சங்​கங்​களைச் சேர்ந்த நிர்வாகிகள் கூறும்​போது, “சுந்​தரவல்லி ஏற்​கெனவே உயர்​கல்​வித் துறை​யில் உயர​தி​காரி​யாக உள்​ளார். கவுரவ முனை​வர் பட்​டத்​துக்கு விண்​ணப்​பித்​துள்​ளார். பார​திதாசன் பல்​கலைக்கழத்தை நிர்​வாகம் செய்​யக்கூடிய இணை இயக்​குநர், அதே பல்​கலைக்​கழகத்​தில் முனை​வர் பட்​டம் பெற விண்​ணப்​பித்​தது எப்​படி, இதற்கு உயர்​கல்​வித் துறை செயலரிடம் ஒப்​புதல் பெறப்​பட்​ட​தா, இவ்​விவ​காரம் குறித்து விசா​ரணை நடத்த வேண்​டும்” என்​றனர்.

இதுகுறித்து கல்​லூரிக் கல்வி ஆணையர் சுந்​தர​வல்​லி​யிடம் கேட்​ட​போது, “பார​தி​தாசன் பல்​கலைக்​கழக துணைவேந்​தர் வழி​காட்​டும் குழு​வில் இருப்​ப​தால் என்​னைப்பற்றி பல்​வேறு சர்ச்​சைகளை கிளப்​புவதை சிலர் வழக்​க​மாகவைத்​துள்​ளனர். நான் முறைப்​படி உயர​தி​காரி​களிடம் அனு​மதிபெற்​று​தான் முனை​வர் பட்​டம்பெற விண்​ணப்​பித்​தேன். 3 பல்​கலைக்​கழகங்​களை நிர்​வகிப்​ப​தால் நுழைவுத் தேர்​வில் என்னால் தேர்ச்​சியடைய முடிய​வில்​லை. ஆனால், மீண்​டும் பார​தி​தாசன் பல்​கலைக்​கழகத்​தில் முனை​வர் பட்​டத்துக்கு விண்​ணப்​பிப்​பேன்’’ என்​றார்.

SCROLL FOR NEXT