தமிழகம்

பள்ளிகள், கல்லூரிகள் அருகே தொடர் சோதனை நடத்த வேண்டும்: மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையர் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ​போதைப் பொருட்​கள், சட்​ட​விரோத மது விற்​பனையை கண்​காணிக்க பள்​ளி​கள், கல்​லூரி​கள் அருகே தொடர் சோதனை நடத்துவது குறித்​து, மது​விலக்​கு, ஆயத்​தீர்வை ஆணை​யர் கார்த்​தி​கா மாவட்ட ஆட்​சி​யர்​கள், ஆயத்​தீர்வை துணை ஆணை​யர்​களுக்கு அனுப்​பிய சுற்​றறிக்​கை: போதைப் பொருள் கலாச்​சா​ரம், சட்​ட​விரோத மது விற்​பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. பள்​ளி​கள், கல்​லூரி​கள், விடு​தி​கள், போக்​கு​வரத்து முனை​யங்​கள் அருகே தொடர் சோதனை நடத்தி போதைப் பொருள், சட்​ட​விரோத மது விற்​பனையை கண்​காணிக்க வேண்​டும்.

ஆசிரியர்​கள், பெற்​றோர், மகளிர் சுய உதவி குழுக்​கள் உள்​ளிட்​டோரின் உதவி​யுடன் ரகசிய தகவல் வலை​யமைப்பை உரு​வாக்கி கள்​ளச் சாராய தயாரிப்பு, விற்​பனை பகு​தி​களை கண்​டறிந்து சோதனை நடத்த வேண்​டும். கள்​ளச்​ சா​ரா​யம் தயாரித்​தல், கடத்​தல், போதைப் பொருள் கடத்​தலுக்கு எதி​ராக கடுமை​யான நடவடிக்கை எடுக்க வேண்​டும். காவல் துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு, டாஸ்​மாக், வனத்​துறை, ரயில்வே காவல் ​துறை​களு​டன் இணைந்து செயல்பட வேண்​டும்.

குறிப்​பாக, டாஸ்​மாக் மற்​றும் மனமகிழ் மன்​றங்​களில் திடீர் ஆய்​வு​மேற்​கொள்ள வேண்​டும். டாஸ்​மாக் கடைகள் மற்​றும் பார்​களின் வேலை நேரம் முறை​யாக பின்​பற்​றப்​படு​வதை உறுதி செய்ய வேண்​டும். கூடு​தல் விலை வைத்து மது விற்​பனை செய்ய கூடாது. 21 வயதுக்கு கீழ் உள்​ளவர்​களுக்கு மது விற்க கூடாது. வெளி மாநில மற்​றும் கள்​ளச்​சா​ராய விநி​யோகத்தை கட்​டுப்​படுத்தவேண்​டும்.

பள்​ளி, கல்​லூரி​களில் மதுமற்​றும் போதைப்​பொருள் தொடர்​பான விழிப்​புணர்வு நிகழ்ச்​சிகள் நடத்த வேண்​டும். இந்த உத்​தர​வு​களை முறை​யாக பின்​பற்​றாத அதி​காரி​கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT