தமிழகம்

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான விசாரணை தொடரும்: திருப்பரங்குன்றம் தீப வழக்கு விசாரணையில் தனி நீதிபதி விளக்கம்

செய்திப்பிரிவு

மதுரை: திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீப வழக்​கில் முழு அவம​திப்பு நடவடிக்​கைக்​கும் 2 நீதிப​தி​கள் அமர்வு தடை விதிக்​க​வில்​லை என நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் தெரி​வித்​துள்​ளார்.

திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்ற உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு தனி நீதிபதி உத்​தர​விட்​டார். இந்த உத்​தரவு நிறைவேற்​றப்​ப​டாத​தால் நீதி​மன்ற அவம​திப்பு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. அவற்​றுக்கு எதி​ரான மேல்​முறை​யீட்டு மனுக்​களை நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்வு நேற்று முன்​தினம் விசா​ரித்​தது. அப்​போது, நீதி​மன்ற அவம​திப்பு மனுக்​கள் மீது தனி நீதிபதி கடந்த டிச.4-ல் பிறப்​பித்த உத்​தர​வுக்கு இடைக்​காலத் தடை விதித்​தும், பிற மேல்​முறை​யீட்டு மனுக்​களுக்கு வழக்கு எண் வழங்கி விசா​ரணைக்கு பட்​டியலிட​வும் உத்​தர​விட்​டனர்.

          

நீதி​மன்ற அவம​திப்பு மனுக்​கள் நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு வந்​தன.

அரசு தரப்​பு: தனி நீதிபதி முன்பு உள்ள அனைத்து நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைகளுக்​கும் 2 நீதிப​தி​கள் அமர்வு தடை விதித்​துள்​ளது.

மனு​தா​ரர் தரப்​பு: டிச.4-ல் தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வுக்கு மட்​டுமே அமர்வு தடை விதித்​துள்​ளது.

நீதிப​தி: முழு நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைகளுக்​கும் தடை விதிக்​கப்​பட்​டுள்​ள​தாக அந்​தத் தடை உத்​தர​வில் எங்கே குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. அந்த உத்​தர​வில், ஏப்.8 வரை இடைக்​காலத் தடை உத்​தரவு பிறப்​பிக்​கப்​படு​கிறது என்​று​தான் கூறப்​பட்​டுள்​ளது.

அரசு தரப்​பு: அனைத்து நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைகளை​யும் எதிர்த்து தொடரப்​பட்ட ஒரு உரிமை​யியல் மற்​றும் இதர மனுக்​களுக்​கும் பொது​வான இடைக்​காலத் தடை பொருந்​தும். மனு​வில் கோரப்​பட்ட கோரிக்​கைகள் குறித்து பதிவுத் துறை​யிடம் விளக்​கம் கேட்​டால் குழப்​பத்தை தவிர்க்​கலாம்.

நீதிப​தி: அமர்​வில் என்ன கேட்​டீர்​கள் என்று எனக்கு எப்​படித் தெரி​யும்?

அரசு தரப்​பு: பதிவுத் துறை​யிடம் அறிக்கை கேட்​கலாம்.

நீதிப​தி: அது என் வேலை​யல்ல, நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​துள்ள இடைக்​கால உத்​தர​வின்​படியே செயல்​படு​வேன். இரு நீதிப​தி​கள் கொண்ட அமர்வு பிறப்​பித்த உத்​தர​வுக்​குக் கீழ்ப்​படிவது என் கடமை. உங்​களைப் போல் அல்​லாமல் நீதி​மன்ற உத்​தர​வு​களுக்கு மரி​யாதை அளிப்​ப​தில் நான் நம்​பிக்கை கொண்​டுள்​ளேன். எனது உத்​தர​வு​கள் வெளிப்​படை​யாக மீறப்​படு​கின்​றன. இவ்​வளவு பிடி​வாத​மாக இருக்​கக் கூடாது. எனக்கு எதி​ராக உங்​கள் எதிர்ப்​பைக் காட்​டாதீர்​கள்.

அரசு தரப்​பு: அப்​படி​யில்​லை. நீங்​கள் ஏன் இப்​படி நினைக்​கிறீர்​கள்?

நீதிப​தி: காவல் ஆணை​யர், காவல் துணை ஆணை​யர் ஏன் ஆஜராக​வில்​லை. தங்​களை மிக​வும் உயர்​வாக நினைக்​கிறார்​களா, சட்​டப்​படி அவர்​களைக் கையாள்​வேன். நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைக்கு எதி​ராக மாவட்ட ஆட்​சி​யரும், காவல் ஆணை​யரும் மேல்​முறை​யீடு செய்​தனர். அதை தள்​ளு​படி செய்து டிச.4-ல் பிறப்​பிக்​கப்​பட்ட உத்​தரவு மீறப்​பட்​டது வேண்​டும் என்றே செய்​யப்​பட்​ட​தா, இல்​லையா என்​பதை ஆய்வு செய்​வது தனி நீதிப​தி​யின் பொறுப்பு என அமர்வு உத்​தர​விட்​டது. அந்த உத்​தர​வும், நேற்று முன்​தினம் அமர்வு பிறப்​பித்த இடைக்​காலத் தடை​யும் முரண்பட வாய்ப்​பில்​லை.

எனவே, முழு நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைக்கு எந்த தடை​யும் இல்​லை. இத​னால்​ நீதி​மன்​ற அவம​திப்​பு மனுக்​களை தொடர்​ந்​து வி​சா​ரிக்​கலாம்​. வி​சா​ரணை ஏப்​.9-க்​கு தள்​ளிவைக்​கப்​படு​கிறது என்​று நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன்​ உத்​தர​விட்​​டார்​.

SCROLL FOR NEXT