தமிழகம்

வைகோ நடைபயண நிகழ்ச்சியைப் புறக்கணித்த காங்கிரஸ்: அழைப்பிதழில் பிரபாகரன் படம் இடம் பெற்றது காரணமா?

செய்திப்பிரிவு

ம​தி​முக பொதுச் செய​லா​ளர் வைகோவின் நடைபயணத் தொடக்க விழா​வில் தி​முக கூட்​ட​ணிக்கட்​சி​யினர் பங்கேற்ற நிலை​யில், கூட்​ட​ணி​யில் அங்​கம் வகிக்​கும் முக்​கிய கட்​சி​யான காங்கிரஸ் விழாவைப் புறக்​கணித்​தது. விழா அழைப்​பிதழில் முன்​னாள் பிரதமர் ராஜீவ்​காந்தி படு​கொலை​யின் முக்​கியக் குற்​ற​வாளி​யான பிர​பாகரன் படம் இடம் பெற்​றுள்​ளது.

இதை காங்கிரஸ் தலை​வர்​கள் விரும்​ப​வில்லை என்று தெரி​கிறது. இந்த நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​றால் தேவையற்ற சர்ச்​சைகள் ஏற்​படு​வதுடன், பதவிக்கே ஆபத்​தாக முடி​யும் என்று செல்​வப்​பெருந்​தகைக்கு முக்​கி​யத் தலை​வர்​கள் அறி​வுறுத்​தி​ய​தால், அவர் இந்​நிகழ்​வில் பங்​கேற்​க​வில்லை என்​றும் கூறப்​படு​கிறது.

எனினும், விழா மேடை மற்​றும் அப்​பகு​தி​யில் வைக்​கப்​பட்​டிருந்த பதாகை​களில் பிர​பாகரன் படம் இடம்பெற​வில்​லை. இதுகுறித்து காங்கிரஸ் கட்​சி​யின் திருச்சி மாநகர் மாவட்​டத் தலை​வர் எல்​.ரெக்​ஸ் ‘இந்து தமிழ் திசை’ செய்​தி​யாளரிடம் கூறும்​போது, “நடைபயண தொடக்க விழாவுக்​கு, விடு​தலைப் புலிகள் தலை​வர் பிர​பாகரன் படம் இடம்பெற்ற அழைப்​பிதழ் வழங்​கப்​பட்​டுள்​ளது.

ராஜீவ்​காந்​தி​யின் ஆன்மா ஒவ்​வொரு காங்கிரஸ் தொண்​ட​னுக்​குள்​ளும் இருக்​கிறது. அப்​படி இருக்​கும்​போது, இது​போன்ற செயல்​கள் விரும்​பத்​தக்​கது அல்ல. அதனால், இந்த விழா​வில் காங்​கிரஸார் பங்​கேற்​க​வில்​லை” என்​றார்.

மதி​முக முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோ கூறும்​போது, “அழைப்​பிதழில் பிர​பாகரன் படம் இடம் பெற்​றது குறித்து தவறான தகவல்​களை சிலர் பரப்பி வரு​கின்​றனர்.

காங்கிரஸ் தலை​வர் ராகுல் காந்தி எனக்கு மிக​வும் நெருங்​கிய நண்​பர். அவரிடம் ஆங்​கிலப் புத்​தாண்​டுக்கு வாழ்த்​துத் தெரி​வித்து நான் செல்​போனில் பேசி​ய​போது, ‘பிர​பாகரன் படம் இடம் பெற்​றது குறித்து இங்​குள்​ளவர்​கள் தவறாகப் புரிந்​து​ கொண்டு பேசுகிறார்​கள்’ என்​றேன்.

அதற்கு அவர், ‘அதைப்​பற்​றிக் கவலைப்பட வேண்​டாம். நீங்​கள் உங்​கள் பணி​களைப் பாருங்​கள்’ என்று கூறி​னார். செல்​வப்​பெருந்​தகை​யால்​ நிகழ்​ச்​சிக்​கு வரமுடிய​வில்​லை. திருச்​சி ​மாவட்​ட ​காங்கிரஸ்​ தலை​வர்​கள்​ வ​ராதது குறித்​து எனக்​குத்​ தெரிய​வில்​லை” என்​றார்​.

SCROLL FOR NEXT