தமிழகம்

மானாமதுரை இளைஞரின் காலை உடைத்த போலீஸார்: உயிரிழப்புக்கு முன்பு நீதித்துறை நடுவரிடம் வாக்குமூலம்

உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த அறிக்கையில் தகவல்

செய்திப்பிரிவு

மதுரை: ​காலில் ஈரசாக்கை போட்டு இரும்​புக் கம்​பி​யால் போலீ​ஸார் அடித்து காலை உடைத்​தனர் என மானாமதுரை இளைஞர், நீதிப​தி​யிடம் அளித்த வாக்​குமூலம் உயர்நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்​டது.

இந்த வழக்​கில் எஸ்​சி, எஸ்டி வன்​கொடுமை தடுப்​புப் பிரிவைச் சேர்க்க நீதிபதி உத்​தர​விட்​டார். சிவகங்கை மாவட்​டம் மானாமதுரையில் போலீஸ் காவலில் உயி​ரிழந்​த​தாக கூறப்​படும் ஆகாஷ் டெல்சனின் தந்தை ராஜேஷ்கண்ணன், இழப்​பீடு உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளு​டன் உயர் நீதிமன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தார்.

          

இந்த மனு நீதிபதி எல்​.விக்​டோரியா கௌரி முன்பு விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது அரசுத் தரப்​பில் கூறும்​போது, நீதி​மன்​றம் உத்​தர​விட்​டும் போராட்டம் கைவிடப்​பட​வில்லை. இதனால் பொது​மக்கள் 80 கிலோ மீட்​டர் சுற்​றிச் செல்​கின்​றனர்.

மாணவர்​கள் உள்​ளிட்டோர் சிரமத்துக்கு ஆளாகி​யுள்​ளனர். போராட்​டக்​காரர்​களை கலைந்து செல்ல வேண்​டாம் என கிருஷ்ண​சாமி, ஜான்​பாண்​டியன் கட்​சி​யினர் அறி​வுறுத்​தி​ய​தாகக் கூறப்​பட்​டது என்றனர்.தொடர்ந்து நீதிப​தி, பொது​மக்​களுக்கு சிரமம் ஏற்​படும் வகை​யில் நடந்து கொள்​ளக் கூடாது.

இதை ஏற்க முடி​யாது என்​றார். மனு​தா​ரர் தரப்​பில், நீதித்​துறை நடு​வரின் ரிமாண்ட் அறிக்​கை​யில் ஆகாஷ் அளித்த வாக்​குமூலத்தை தாக்​கல் செய்​தனர். அதில் கூறியிருப்​ப​தாவது: சீருடை​யில் இல்லாத காவலர்​கள் என்​னையும், குணாவை​யும் பிடித்​தனர்.

என் கண்​களைக் கட்டி வேறு இடத்​துக்கு அழைத்​துச்​சென்று எனது காலை கற்​களுக்கு இடையில்வைத்​து, ஈரச்சாக்​கைப் போட்டு கம்​பி​யால் அடித்து உடைத்தனர். பின்​னர் மானா மதுரை மருத்​து​வ​மனைக்கு அழைத்துச் சென்​றனர். பாலத்​திலிருந்து தவறி விழுந்​த​தாகக் கூறு​மாறு காவல்​துறை​யினர் மிரட்​டினர்.

கண்​களைக் கட்​டியதால் யார் அடித்​தது என எனக்​குத் தெரிய​வில்​லை. இவ்வாறு அதில்கூறப்​பட்​டுள்​ளது. இதிலிருந்து போலீ​ஸார் தாக்​கிய​தால்​தான் ஆகாஷ் உயி​ரிழந்​தது உறு​தி​யாகிறது. இருப்​பினும் சரி​யான பிரிவு​களில் வழக்​குப் பதிவு செய்​யப்​பட​வில்லை என மனுதாரர்தரப்பில் கூறப்​பட்​டது.

அரசுத் தரப்​பில், ஆகாஷ் நீதித் துறை நடுவரிடம் கூறியது உண்​ையா எனத் தெரியாது. சரி​யான சான்று கிடைத்தவுடன் வழக்​கின் பிரிவு​கள் மாற்​றப்​படும் தேசிய நெடுஞ்​சாலை​யில் நடக்கும் மறியலைக் கைவிட வேண்​டும் எனக் கூறப்​பட்​டது.

பின்​னர் நீதிப​தி, ஆகாஷ் இறப்​புக்​கான காரணம் குறித்து கேட்​ட​போது, ரசாயனப் பரிசோதனை முடிவு​கள் வந்த பிறகே இறப்​புக்​கான காரணம் தெரிய​வரும். முடிவு வர 10 நாட்களாகும் என அரசு தரப்​பில் கூறப்பட்​டது.

நீதிப​தி, காவல் மரணங்​கள் இரும்​புக் கரம் கொண்டு தடுக்​கப் பட வேண்​டும். அழுத்தம் கொடுத்​து, அனைத்து கோரிக்கைகளை​யும் நிறைவேற்ற நினைப்பது சரி​யானது அல்ல.

சாலை மறிய​லால் மக்​கள் பாதிக்​கப்​படு​கிறார்​கள் என்​றால் பிரதமர், முதல்​வர் வரு​கை​யின்​போது போக்​கு​வரத்து மாற்​றம் செய்​வது ​போல் ​மக்​களுக்​காகப் போக்​கு​வரத்தை மாற்​றம் செய்​ய​லாமே என நீதிபதி கேட்டார்.

பின்​னர் நீதிபதி கூறும்​போது, உயி​ரிழந்த ஆகாஷ் பட்​டியல் சமூகத்​தைச் சேர்ந்​தவர் என்​ப​தற்​கான சான்று சமர்ப்​பிக்​கப்​பட்​டுள்ள​தால் வழக்​கில் எஸ்​சி, எஸ்டி பிரிவை​யும் சேர்த்து முதல் தகவல் அறிக்​கை​யில் சிபிசிஐடி போலீ​ஸார் மாற்​றம் செய்ய வேண்டும்.

வழக்​கறிஞர்​கள் சாமிதுரை, மயில்​வாகன ராஜேந்​திரன், ராமலிங்​கம் ஆகியோர் பேச்​சு நடத்தி நெடுஞ்​சாலையில் நடக்​கும் போராட்​டத்​தைக் கைவிடச் செய்ய வேண்டும். மறுத்தால் அவர்​களை அங்கிருந்து அப்​புறப்படுத்த உத்​தர​விட வேண்​டி வரும். விசா​ரணை வியாழக்​கிழமைக்கு (இன்று) தள்ளிவைக்கப்படுகிறது என உத்​தர​விட்​டார்.

SCROLL FOR NEXT