தமிழகம்

தனியார் பேருந்துகளில் கட்டண உயர்வு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் வெளி​யிட்ட அறிக்​கை​: தமிழகத்​தில் கோவை, ஈரோடு, திருப்​பூர், நீல​கிரி, திண்​டுக்​கல், சேலம், மதுரை, விருதுநகர், நெல்​லை, தூத்​துக்​குடி, விழுப்​புரம், திரு​வண்​ணா​மலை, நாகை உள்​ளிட்ட மாவட்​டங்​களில் தனி​யார் பேருந்து நிறு​வனங்​கள் எவ்​வித முன்​னறி​விப்​புமின்றி நகர, புறநகர் பேருந்​துகளில் தன்​னிச்​சை​யாக கட்​ட​ணத்தை உயர்த்​தி​யுள்​ளன.

முன்பு ரூ.10 ஆக இருந்த கட்டணம், ரூ.15 ஆக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. அரசின் உத்​தர​வின்றி பயணி​கள் கட்​ட​ணத்தை உயர்த்​து​வது சட்​ட​விரோத​மாகும்.

அதே​நேரம் இந்த கட்டண உயர்​வுக்கு எதி​ராக போக்​கு​வரத்​துத்​துறை அதி​காரி​கள், மாவட்ட நிர்​வாகம் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​காதது அதிர்ச்​சி​யளிக்​கிறது.

மக்​களின் நலனை கருத்தில் கொண்டு துறை அதி​காரி​கள் தனி​யார் பேருந்து நிறு​வனங்​களின் கட்டண உயர்வை திரும்​பப் பெற உரிய நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT