பெ.சண்முகம் | கோப்புப் படம்

 
தமிழகம்

அதிக இடங்களில் வெற்றிபெற்று திமுக ஆட்சி அமைக்கும்: கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் நம்பிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: திமுக கூட்​டணி அதிக இடங்​களில் வெற்​றி​பெற்று ஆட்​சியை அமைக்​கும் என, சென்​னை​யில் வாக்கு செலுத்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் தலை​வர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான வாக்​குப்​ப​திவு நேற்று நடை​பெற்​றது. இதையொட்டி, இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் தேசிய பொதுச் செய​லா​ளர் டி.​ராஜா, தி.நகர், தக்​கர் பாபா வித்​யாலயா பள்​ளி​யிலும், மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் வியாசர்​பாடி மூர்த்தி நகரில் உள்ள நடுநிலைப் பள்​ளி​யிலும் தங்​களது வாக்​கு​களைச் செலுத்​தினர். மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் ஆவடி மாநக​ராட்​சி​யில் உள்ள கோயில்​ப​தாகை தொடக்​கப் பள்​ளி​யில் தனது வாக்கை செலுத்​தி​னார்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அவர்​கள் கூறிய​தாவது:

டி.​ராஜா: நமது ஜனநாயகத்தை வலுப்​படுத்த வாக்கு செலுத்​து​வது என்​பது ஒரு முக்​கிய​மான உரிமை​யாகும். இந்த தேர்​தலில் திமுக தலை​மையி​லான கூட்​டணி வெற்றி பெற்​று ஆட்சி அமைக்​கும். அதே​போல், மேற்கு வங்​கத்​தி​லும் பாஜக தோற்​கடிக்​கப்பட வேண்​டும். தமிழகம் பாஜக​வின் பேரழிவு தரும் சித்​தாந்​தத்​துக்கு எதி​ராக போராடு​வதைப் போல​வே, வங்​காள மக்​களும் பாஜகவை எதிர்த்​துப் போராடி தோற்​கடிக்க வேண்​டும்.

பெ.சண்​முகம்: மக்​கள் நீண்ட வரிசைகளில் நின்​று, ஆர்​வத்​துடன் வாக்​களித்​துள்​ளனர். நம்மை யார் ஆள வேண்​டும் என்​பதை தீர்​மானிக்​கக் ​கூடியது இந்த தேர்​தல். திமுக தலை​மையி​லான மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணி, அதி​க​மான இடங்​களில் வெற்​றி​பெற்று ஆட்​சியை அமைக்​கும். இதற்​கான அறிகுறிகள் தமிழகம் முழு​வதும் தென்​படு​கிறது என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT