தமிழகம்

சார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானத்தின் அவசரகால கதவை திறந்து பயணி குதித்து ஓடியதால் பரபரப்பு

செய்திப்பிரிவு

சென்னை: ​சார்​ஜா​வில் இருந்து சென்னை வந்த விமானத்​தின் அவசர​கால கதவை திறந்து பயணி ஒரு​வர் குதித்து ஓடிய​தால் பெரும் பரபரப்பு ஏற்​பட்​டது.

இதனால், அடுத்​த​தாக லண்​டனில் இருந்து வந்த விமானம் சென்​னை​யில் தரை​யிறங்க முடி​யாத​தால், பெங்​களூருக்கு திருப்பி அனுப்​பப்​பட்​டது.

சார்​ஜா​வில் இருந்து ஏர் அரேபியன் ஏர்​லைன்ஸ் விமானம், 217 பயணி​களு​டன் நேற்று அதி​காலை 3.25 மணிக்கு சென்னை சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் தரை​யிறங்​கி, ஓடு பாதை​யில் இருந்து டாக்ஸி வேயில் வந்து நிற்க தயா​ரானது.

அப்​போது, விமானத்​தில் இருந்த புதுக்​கோட்​டையை சேர்ந்த முகமது நிஜா​முதீன் செரீப் (30) என்ற பயணி திடீரென விமானத்​தின் அவசர​கால கதவை திறந்​து, மின்​னல் வேகத்​தில் அதன் சரக்கு பாதை வழி​யாக வெளி​யில் குதித்து ஓடி​னார். இச்​சம்​பவம் சென்னை விமான நிலை​யத்​தி​லும் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

சென்னை விமான நிலை​யத்​தின் ஓடு​பாதை பகு​தி​யில் அவசர​கால அபாய அறி​விப்பு எச்​சரிக்கை மணி ஒளிக்​கப்​பட்​டது. உடனடி​யாக, பாது​காப்பு அதி​காரி​கள் விரைந்து வந்​து, விமானத்​தின் அவசர​கால கதவு வழி​யாக வெளி​யில் குதித்து ஓடிய பயணியை சுற்றி வளைத்து பிடித்​தனர்.

இதற்​கிடை​யில், விமானம் அது நிக்க வேண்​டிய இடத்​துக்கு பதிலாக, டாக்ஸி வேயில் நிறுத்​தப்​பட்​டது. இதனை தொடர்ந்​து, அடுத்​த​தாக லண்​டனில் இருந்து 284 பயணி​களு​டன் பிரிட்​டிஷ் ஏர்​வேஸ் விமானம் சென்​னை​யில் தரை​யிறங்​கு​வதற்​காக வந்​தது.

டாக்ஸி வேயில் ஏர் அரேபியன் ஏர்​லைன்ஸ் விமானம் நின்று கொண்டு இருந்​த​தால், அந்த விமானம் சென்​னை​யில் தரை​யிறங்க முடி​யாத​தால், பெங்​களூருக்கு திருப்பி அனுப்​பப்​பட்​டது.

உடனடி​யாக, மத்​திய உளவுத்​துறை அதி​காரி​கள், சென்னை விமான நிலைய உயர் அதி​காரி​கள் பாது​காப்பு அதி​காரி​கள் சம்பவ இடத்​துக்கு விரைந்து வந்து விசா​ரணை மேற்​கொண்​டனர்.

இதற்​கிடையே, ஓடும் விமானத்​தில் இருந்து கீழே குதித்த பயணியை தனி அறை​யில் வைத்து பாது​காப்பு அதி​காரி​கள் விசா​ரிதனர். விசா​ரணை​யில், அந்த பயணி மனநிலை பாதிக்​கப்​பட்​ட​வர் போல் பேசி​ய​தால், அவர் அவர் உண்​மை​யில் மனநிலை பாதிக்​கப்​பட்​ட​வரா என்​பது உள்​ளிட்ட பல்​வேறு கோணங்​களில் அதி​காரி​கள் தொடர்ந்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

சென்னை வந்த ஏர் அரேபியன் ஏர்​லைன்ஸ் பயணி​கள் விமானம் சென்​னை​யில் இருந்து மீண்​டும் சார்​ஜாவுக்கு அதி​காலை 4 மணிக்கு புறப்பட வேண்​டும். ஆனால், இந்த சம்​பவம் காரண​மாக விமானம் தாமத​மாக 7.45 மணிக்கு புறப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது.

அதே​போல், பெங்​களூருக்கு திருப்பி அனுப்​பப்​பட்ட பிரிட்​டிஷ் ஏர்​வேஸ் பயணி​கள் விமானம், பெங்​களூரில் இருந்து சென்​னைக்கு திரும்​பியது. சென்​னை​யில் இருந்து அதி​காலை 5.35 மணிக்கு லண்​டன் புறப்பட வேண்​டிய அந்த விமானம் காலை 9 மணி அளவில் லண்​டன் புறப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது.

விமானத்​தின் அவசர​கால கதவை திறந்து விமானத்​தில் இருந்து குதித்த பயணிக்கு லேசான சிறாய்ப்பு காயங்​கள் ஏற்​பட்​ட​தால், அவருக்கு சென்னை வி​மான நிலைய மருத்​து​வ​மனை​யில் முதலுதவி சிகிச்சை அளிக்​கப்​பட்டது. சினிமா காட்சி போல் நடந்த இந்​த சம்​பவத்​தால்​, இதனால்​ சென்​னை வி​மான நிலை​யத்​தில்​ பெரும்​ பரபரப்​பு ஏற்​பட்​டது.

SCROLL FOR NEXT