தமிழகம்

உடன்குடி அனல் மின் நிலையத்தில் வணிக ரீதியான உற்பத்தி தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: உடன்குடி அனல் மின்நிலையம் வணிக ரீதியான 660 மெகாவட் முழு மின் உற்பத்தியை தொடங்கியது என மின் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ரூ.13,076 கோடி மதிப்பீட்டில் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகளுடன் அனல் மின்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 13-ம் தேதி உடன்குடி மிக உய்ய அனல் மின்நிலையம் (2x660 MW) அலகு -1-ல் மின் உற்பத்தியை தொடங்கியது. தினமும் 300 முதல் 400 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

உடன்குடி அனல் மின்நிலை யத்தில் அலகு 1-ல் வணிக ரீதியான 660 மெகாவாட் முழு மின் உற்பத்தியை விரைவில் கொண்டு வர முதல்வர் உத் தரவிட்டார். அதன் அடிப்படை யில் உடன்குடி (660 மெகா வாட்) அனல் மின் நிலையம் அலகு 1-ல் வணிக ரீதியான முழு மின் உற்பத்தி அடைய பல்வேறு சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன.

72 மணி நேரம் முழு உற்பத்தி: இதை தொடர்ந்து அலகு 1-ல் வணிக ரீதியான சோதனை உற்பத்திக்கான தொடர் முழு உற்பத்தி திறன் ஆய்வு சோதனை ஓட்டம் கடந்த 2-ம் தேதி மாலை 04.16 மணி முதல் நேற்று (5-ம் தேதி) மாலை 04.15 வரை வெற் றிகரமாக நடத்தப்பட்டு தொடர்ச்சியாக 72 மணி நேரம் முழு உற்பத்தியான 660 மெகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்தது.

இந்த சாதனை மைல்கல்லை தொடர்ந்து, இந்த அனல் மின் நிலையம் அலகு 1-ல் நேற்று மாலை முதல் 660 மெகா வாட்டுக்கு மேல் வணிக ரீதி யாக முழு மின் உற்பத்திக்கு கொண்டுவரப்பட்டது. மேலும், உடன்குடி அனல் மின் நிலை யம் அலகு 2-ல் கட்டுமான வேலைகள் மிக துரிதமாக நடை பெற்று வருகிறது. விரைவில் மின் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

SCROLL FOR NEXT