தமிழகம்

பாரம்பரியமிக்க முதல்வர் அலுவலகம் இடமாற்றம்: நாமக்கல் கவிஞர் மாளிகையில் முன்னேற்பாடுகள் தீவிரம்

செய்திப்பிரிவு

சென்னை: நீண்​ட​கால பாரம்​பரியமிக்க முதல்​வர் அலு​வல​கத்​தை, சென்னை தலை​மைச் செயல​கத்​தில் உள்ள நாமக்​கல் கவிஞர் மாளி​கைக்கு மாற்​றும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்ற தவெக, கடந்த மே 10-ம் தேதி ஆட்​சி​யமைத்​தது. அதன்​பின்​னர் அலு​வல் மற்​றும் நிர்​வாக ரீதி​யாக பல்​வேறு மாற்​றங்​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. அந்​தவகை​யில், தலை​மைச் செயல​கத்​தில் உள்ள முதல்​வர் அலு​வல​கம் தற்​போது இடமாற்​றம் செய்​யப்பட உள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

தலை​மைச் செயலக வளாகத்​தில் 2 கட்​டிடங்​கள் உள்​ளன. பிர​தான புனித செயின்ட் ஜார்ஜ் கோட்​டை​யில் உள்ள 3 தளங்​களில் முதல்​வர், அமைச்​சர்​களின் அலு​வல​கங்​கள் உள்​ளன. மற்​றொரு கட்​டிடம் 10 அடுக்​கு​கள் கொண்ட நாமக்​கல் கவிஞர் மாளி​கை​யாகும். இதில் துறை செயலர்​களின் அலு​வல​கங்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன.

இதற்​கிடையே செயின்ட் ஜார்ஜ் கோட்​டை​யில் இடப்​பற்​றாக்​குறை, வாகன நிறுத்​து​மிட வசதி குறை​பாடு மற்​றும் புதிய கட்​டிடங்​களை அமைப்​ப​தற்​கான கட்​டுப்​பாடு​கள் காரண​மாக முதல்​வர் அலு​வல​கத்தை நாமக்​கல் கவிஞர் மாளி​கைக்கு மாற்ற அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

இதுத​விர, முதல்​வர் அலு​வல​கத்தை மாற்ற வேண்​டுமென ஜோதிட ரீதி​யாக​வும் விஜய்க்கு ஆலோ​சனை​கள் வழங்​கப்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. அதன்​படி, நாமக்​கல் கவிஞர் மாளி​கை​யில் 10-வது தளத்​தில் முதல்​வர் அலு​வல​கம் மாற்​றப்பட உள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

இதற்​கான பணி​கள் தற்​போது நடை​பெற்று வரு​கின்​றன. முதல்​வர் இருக்​கும் இடத்​தில்​தான் அவரின் தனிச்​செயலர்​களும் பணிசெய்ய முடி​யும் என்​ப​தால், அவர்​களுக்​கும் நாமக்​கல் கவிஞர் மாளி​கை​யில் அலு​வல​கம் தயார் செய்​யப்​பட்டு வரு​கிறது. இதற்​கிடையே, ஒட்​டுமொத்​த​மாக தலை​மைச் செயல​கத்தை வேறு புதிய இடத்​துக்கு மாற்​ற​வும் தவெக அரசு பரிசீலித்து வரு​வ​தாக​வும் கூறப்​படு​கிறது.

ஏற்​கெனவே இடநெருக்​கடி காரண​மாக திமுக ஆட்சி காலத்​தில், 2010-ம் ஆண்டு சென்னை ஓமந்​தூ​ரார் அரசினர் தோட்​டத்​தில் புதிய தலை​மைச் செயல​கக் கட்​டிடம் கட்டி திறக்​கப்​பட்​டது. ஆனால், அதன் பிறகு அதி​முக ஆட்​சிக் காலத்​தில், அந்​தக் கட்​டிடம் பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யாக மாற்​றப்​பட்​டு, தலை​மைச் செயல​கம் மீண்​டும் பழைய இடத்​துக்​கே மாற்​றப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT