அமைச்சர் நிர்மல் குமார் | கோப்புப் படம்

 
தமிழகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்​பாபிஷேக விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்க மாட்டார்: அமைச்சர் நிர்மல் குமார் தகவல்

செய்திப்பிரிவு

மதுரை: மீ​னாட்சி அம்​மன் கோயில் கும்​பாபிஷேக விழா​வில் முதல்​வர் விஜய் பங்​கேற்க மாட்​டார் என அமைச்​சர் சி.டிஆர்​.நிர்​மல்​கு​மார் தெரி​வித்​தார்.

மதுரை சின்ன சொக்​கி​குளத்​தில் புதிய வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்தை நேற்று திறந்து வைத்​தார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது: மதுரை மீனாட்சி அம்​மன் கோயில் கும்​பாபிஷேகம் வரும் செப்.17-ம் தேதி நடை​பெறுகிறது.

இதற்​கான முன்​னேற்​பாடுகள் குறித்து அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​யுள்​ளேன். பக்​தர்​களுக்​கான அடிப்​படை வசதி​கள் செய்யவும் கோயிலுக்​குள் சிர​மமின்றி வந்து செல்​வதற்கு வசதி​யாக கியூஆர் கோடு மூலம் நுழைவு சீட்டு வழங்கவும் முடி​வெடுத்​துள்​ளோம்.

கும்​பாபிஷேகத்​தன்று கோயிலை சுற்​றி​யுள்ள வீடு​கள் உள்​ளிட்ட கட்​டிடங்​களில் அதிக எண்​ணிக்​கை​யில் மக்​கள் கூடு​வார்​கள் என்​ப​தால், கட்​டிடங்​களின் உறு​தித்​தன்​மையை ஆய்வு செய்​ய​வுள்​ளோம். கும்​பாபிஷேக விழாவையொட்டி கோயிலை சுற்​றி​யுள்ள இடங்​களில் எல்​இடி திரைகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்​கப்​படும்.

இந்த கும்​பாபிஷேகவிழாவில் முதல்​வர் விஜய் பங்​கேற்க வாய்ப்பு இல்​லை. பக்​தர்​கள் கூட்​டம் அதி​க​மாக இருக்​கும். முதல்​வர் வந்​தால் கூட்​டம் மேலும் அதி​கரிக்​கும். இதை கருத்​தில் கொண்​டும், அன்​றைய தினம் முதல்​வர் பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்க வேண்​டி​யிருப்​ப​தா​லும், அவர் விழாவுக்கு வரு​வதற்​கான சாத்​தி​யக்​கூறு இல்​லை.

மாவட்ட ஆட்​சி​யருக்கு தெரி​யாமல் குஜியலி​யம்​பாறை வட்​டாட்​சி​யர், தனது சொந்த விருப்​பு வெறுப்​பின் அடிப்​படை​யில் சுற்​றறிக்கை அனுப்​பி​யுள்​ளார். அவர் ஓய்​வு​பெற 6 மாதங்​களே உள்​ளன. அவரது சுற்​றறிக்கை திரும்​பப் பெறப்​பட்​டுள்​ளதோடு, பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளார். மானியக் கோரிக்​கை​களின்​போது எதிர்க்​கட்​சிகள் பேச பேர​வைத் தலை​வர் வாய்ப்பு வழங்​கு​கிறார்.

பல்​கலைக்​கழகங்​கள் ஆளுநர் மேற்​பார்​வை​யிலும், அவரது கட்​டுப்​பாட்​டிலும் உள்​ளன. வரும் ஜனவரி மாதத்​தில் பல பல்​கலைக்​கழகங்​களுக்கு துணைவேந்​தர்​கள் இல்​லாத நிலை ஏற்பட வாய்ப்பு உள்​ளது. பட்​டம் வழங்க முடி​யாமல் பல்​வேறு குளறு​படிகள் உள்​ளன. இப்​பிரச்​சினை​களுக்கு தீர்வு காணும் வகை​யில் கல்​வியை பொதுப்​பட்​டியலில் இருந்து மாநில பட்​டியலுக்கு மாற்ற வேண்​டும். இவ்​வாறு அவர் தெரிவித்​தார்.

SCROLL FOR NEXT