தமிழகம்

மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில் குறுவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடியில் சிறப்பு தொகுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: நீர் இருப்பு குறைவு காரணமாக, மேட்​டூர் அணை திறக்​கப்​ப​டாத நிலை​யில், குறுவை சாகுபடியை ஊக்​குவிக்க ரூ.134.83 கோடி​யில் குறுவை சிறப்பு தொகுப்​புத் திட்​டம் செயல்​படுத்​தப்​படும் என்று முதல்​வர் விஜய் அறி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட அறி​விப்​பு: தமிழகத்​தில் சராசரி​யாக 52.72 லட்​சம் ஏக்​கரில் நெல் சாகுபடி செய்​யப்​படு​கிறது. இதில், காவிரி டெல்டா பகு​தி​களான தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை மாவட்​டங்​களின் அனைத்து பகு​தி​களி​லும், கடலூர், திருச்​சி, அரியலூர் மாவட்​டங்​களில் சில பகு​தி​களி​லும் நெற்​ப​யிரே முதன்​மை​யாக சாகுபடி செய்​யப்​படு​கிறது.

டெல்டா மாவட்​டங்​களில் ஆண்​டுக்கு 20.65 லட்​சம் ஏக்​கர் பரப்​பில் நெல் சாகுபடி செய்​யப்​படு​கிறது. இதில், குறு​வைப் பரு​வத்​தில் மட்​டும் சராசரி​யாக 5.14 லட்​சம் ஏக்​கரில் சாகுபடி நடை​பெறுகிறது. மேலும், டெல்டா அல்​லாத இதர மாவட்​டங்​களில், ஆண்​டுக்கு 32.07 லட்​சம் ஏக்​கரில் நெல் சாகுபடி செய்​யப்​படு​கிறது.

இதில், கார், குறுவை, சொர்​ண​வாரி பரு​வத்​தில் மட்​டும் சராசரி​யாக5.48 லட்​சம் ஏக்​கர் பரப்​பில் நெல் சாகுபடி செய்​யப்​படு​கிறது.

தஞ்​சாவூர், நாகப்​பட்​டினம், திரு​வாரூர், மயி​லாடு​துறை, கடலூர் திருச்​சி, அரியலூர் ஆகிய டெல்டா மாவட்​டங்​களில் குறுவை நெல் சாகுபடி செய்ய, மேட்​டூர் அணை​யில் ஆண்​டு​தோறும் ஜூன் 12-ம் தேதி தண்​ணீர் திறக்​கப்​படு​வது வழக்​கம். நடப்பு தென்​மேற்​குப் பரு​வத்​தில் ‘எல்​நினோ’ எனும் நிகழ்​வால் மழை அளவு 90 சதவீதத்​துக்​கும் குறை​வாக இருக்​கும் என இந்​திய வானிலை ஆய்வு மையம் அறி​வித்​துள்​ளது. தற்​போது, பரு​வ​மழை தாமத​மாகும் நிலை​யில் மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து குறை​வாக உள்​ளது. இதனால் தற்​போது மேட்​டூர் அணையில் நீர்​மட்​டம் 79.56 அடி, நீர் இருப்பு 41.52 டிஎம்​சி​யாக மட்​டுமே உள்​ளது.

எனவே, ஜூன் 12-ம் தேதி மேட்​டூர் அணையை திறப்​ப​தற்​கான சாத்​தி​யக்​கூறு இல்​லாத நிலை உள்​ளது. இதனால், காவிரி டெல்டா மாவட்​டங்​களில் இயல்​பாக நெல் சாகுபடி மேற்​கொள்​ளும் 5 லட்​சம் ஏக்​கரில் சாகுபடி செய்​வதற்​கான வாய்ப்பு மிக​வும் குறை​வாகவே உள்​ளது. எனவே, நெல் உற்​பத்​தியை அதி​கரித்​து, விவ​சா​யிகள் பயனடை​யும் வகை​யில், குறுவை சிறப்பு தொகுப்​புத் திட்​டம் செயல்​படுத்​தப்​படும் என முதல்​வர் விஜய் அறி​வித்​துள்​ளார்.

இதன்​படி, வடி​முனைக் குழாய் கிணறுகள் (ஃபில்​டர் பாயின்ட்​ஸ்) மூலம் டெல்டா மாவட்​டங்​களில் குறுவை சாகுபடி செய்​யும் விவ​சா​யிகளை ஊக்​குவிக்க ரூ.77.50 கோடி, டெல்டா அல்​லாத மாவட்​டங்​களில் கார், குறு​வை, சொர்​ண​வாரி நெல் சாகுபடியை ஊக்​குவிக்க ரூ.57.33 கோடி என மொத்​தம் ரூ.134.83 கோடி​யில் குறுவை சிறப்பு தொகுப்​புத் திட்​டம் செயல்​படுத்​தப்​படும். இந்த திட்​டத்​தில், நெல் இயந்​திரநடவு, நேரடி நெல் விதைப்​புக்​கான ஊக்​கத்​தொகை, உயிர் உரங்​கள், நெல் நுண்​ணூட்ட உரக்​கல​வை, விதை நெல் விநி​யோக மானி​யம், புதி​தாக வெளி​யிடப்​பட்ட நெல் ரகங்​களின் சான்று விதை உற்​பத்​திக்​கான ஊக்​கத்​தொகை ஆகியவை வழங்​கப்​படும்.

இத்​திட்​டத்​தின் மூலம், இயந்​திரமய​மாக்​கல் ஊக்​குவிக்​கப்​படு​வதுடன், நீர் மேலாண்மை மேம்​படுத்​தப்​படும். தரமான விதைகள், தொழில்​நுட்​பங்​கள் பயன்​பாட்​டின் மூலம் நெல் சாகுபடி​யின் பரப்​பு, உற்​பத்​தி, உற்​பத்தி திறன் அதி​கரிக்​கப்​படு​வதுடன், விவ​சா​யிகளின் வரு​மானத்தை உயர்த்​தி, மாநிலத்​தின் உணவுப் பாது​காப்பை வலுப்​படுத்தஉறு​துணை​யாகவும் அமை​யும்.

வேளாண் பொறி​யியல் துறை வாயி​லாக டெல்டா மாவட்​டங்​களில் உள்ள 2,325 கி.மீ. நீள​முள்ள ‘சி’, ‘டி’ வாய்க்​கால்​கள் ரூ.10 கோடி செல​வில் தூர்​வாரப்​பட்​டுள்​ளன. நீர்​வளத் துறை மூலம் ரூ.100 கோடி செலவில் 4,971 கி.மீ. நீள​முள்ள ‘ஏ’, ‘பி’ வாய்க்​கால்​கள் தூர்​வாரும் பணி​ தொடங்​கப்​பட்​டு, 97 சதவீத பணி​கள் முடிவடைந்​துள்​ளன.

மேலும், குறுவை சாகுபடிக்கு 10,714 டன் நெல் விதைகள், 4.02 லட்​சம் டன் உரங்​கள் இருப்பு வைக்​கப்​பட்​டுள்​ளன. அத்​துடன் விவ​சா​யிகள் பயன்​பெறும் வகை​யில் தடை​யில்லா மும்​முனை மின்​சா​ரம் நாள் ஒன்​றுக்கு 18 மணி நேரம் வழங்​கப்​படும். எனவே, டெல்டா மற்​றும் டெல்டா அல்​லாத மாவட்​டங்​களைச் சேர்ந்த விவ​சா​யிகள் குறுவை சிறப்பு தொகுப்​புத் திட்​டத்​தின் கீழ்​ வழங்​கப்​படும்​ உதவி​களைப்​ பெற்று பயனடைய​லாம்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT