கோப்புப்படம்

 
தமிழகம்

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் பால் கொள்​முதல் விலையை லிட்​டர் ஒன்றுக்கு ரூ.3 உயர்த்தி முதல்​வர் விஜய் அறி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து சட்​டப்​பேர​வை​யில் 110- விதி​யி்ன் கீழ் நேற்று அறி​விப்பு வெளி​யிட்டு அவர் பேசி​ய​தாவது: உலகில் தான் உற்​பத்தி செய்​யும் பாலைத் தனது சந்​த​தி​களுக்கு மட்​டுமின்​றி, மனிதர்​கள் உள்​ளிட்ட பிற ஜீவ​ராசிகளுக்​கும் வழங்கி உயிரைக் காக்​கும் பசு​வைத் தெய்​வ​மாகப் போற்றி வளர்த்து வரு​வது நமது பாரம்​பரி​யத்​தின் சிறப்​பு.

இன்​றைய அறி​வியல் உலகில், ஒரு லிட்​டர் பாலை உற்​பத்தி செய்​வதற்​காகப் பசு​வின் உடலில் சுமார் 500 லிட்​டர் ரத்​தம் சுத்​தி​கரிக்​கப்​படு​வ​தாகக் கூறப்​படும்​போது, பசு​வின் உழைப்பை எண்ணி வியக்​கத் தோன்​றுகிறது.

தமிழகத்​தில் 8,800 பால் கூட்​டுறவுச் சங்​கங்​களில் உள்ள 3.16 லட்​சம் பால் உற்​பத்​தி​யாளர்​களிட​மிருந்து தினசரி 34 லட்​சம் லிட்​டர் பால் கொள்​முதல் செய்​யப்​பட்டு ஆவின் நிறு​வனத்​தின் மூலம் நாளொன்​றுக்கு 31 லட்​சம் லிட்​டர் பால் நுகர்​வோருக்கு விற்​பனை செய்​யப்​பட்டு வரு​கிறது.

தற்​போது 4.3 சதவீதம் கொழுப்​புச்​சத்து மற்​றும் 8.2 சதவீதம் இதரச்​சத்​துக்​கள் அடங்​கிய ஒரு லிட்​டர் பாலுக்கு கொள்​முதல் விலை​யாக ரூ.35-ம், மாநில ஊக்​கத்​தொகை​யாக ஒரு லிட்​டர் பாலுக்கு ரூ.3 ரூபா​யும், என ஒரு லிட்​டருக்கு கொள்​முதல் விலை​யாக ரூ.38 கடந்த 2022 நவ.5-ம் தேதி முதல் வழங்​கப்​பட்டு வரு​கிறது.

அதி​காலை 3 மணிக்கே எழுந்து மாடு​களை சுத்​தம் செய்​து, பால் உற்​பத்தி செய்​யும் உற்​பத்​தி​யாளர்​களின் உழைப்​பை​யும், தீவனம் மற்​றும் வேலை​யாட்​களின் கூலி உள்​ளிட்ட அதி​கரித்து வரும் செல​வு​களை​யும் கடந்த கால அரசு போதிய அளவில் கருத்​தில் கொள்​ள​வில்​லை. உற்​பத்​தி​யாளர்​களுக்கு கொள்​முதல் விலையை உயர்த்த வேண்​டும் என்ற எண்​ணம் கொஞ்​சம் கூட இல்​லாமல் இருந்​துள்​ளது.

கடந்த காலத்​தில் கொள்​முதல் விலை உரிய அளவில் உயர்த்​தப்​ப​டாத நிலை​யில், நம் அரசு சந்​தித்து வரும் அதி​கப்​படி​யான நிதி நெருக்​கடி​யிலும் பால் உற்​பத்​தி​யாளர்​களின் நலனை​யும் வாழ்​வா​தா​ரத்​தை​யும் கருத்​தில் கொண்​டு, அவர்​களின் உன்​னத​மான உழைப்​புக்கு உரிய மதிப்பை வழங்​கும் வகை​யில் கொள்​முதல் விலையை உயர்த்​து​வது நமது அரசின் கடமை​யாகும்.

தொடக்க பால் உற்​பத்​தி​யாளர்​கள் கூட்​டுறவு சங்​கங்​களில் பால் வழங்​கும் 3.16 லட்​சத்​துக்​கும் மேலான பால் உற்​பத்​தி​யாளர்​கள் பயன் அடை​யும் வகை​யில், பால் கொள்​முதல் விலையை ஒரு லிட்​டருக்கு கூட்​டுறவு சங்​கம் மூல​மாக ரூ.1 ரூபாய் உயர்த்​த​வும், மேலும், அரசு ஊக்​கத்​ தொகையை ரூ.3 லிருந்து ரூ.5 ஆக உயர்த்​த​வும், இதன் மூலம், ஒரு லிட்​டர் பாலுக்​கான கொள்​முதல் விலையை ரூ.38 லிருந்து ரூ.41ஆக உயர்த்​த​வும் அரசு முடி​வெடுத்​துள்​ளது.

இந்த கொள்​முதல் விலை உயர்​வால் கூடு​தலாக ஒரு மாதத்​துக்கு ரூ.30 கோடி​யும், ஆண்​டுக்கு ரூ.360 கோடி​யும் செல​வாகும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

முதல்​வருக்​கு நன்றி

தமிழக பால் முகவர்​கள் சங்​கத்​தின் தலை​வர் பொன்​னுசாமி வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘பால் உற்​பத்​தி​யாளர்​களுக்கு மாநில அரசிட​மிருந்து லிட்​டருக்கு ரூ.2-ம், ஆவின் தரப்​பிலிருந்து லிட்​டருக்கு ரூ.1-ம் ஆக மொத்​தம் லிட்​டருக்கு ரூ.3 பால் கொள்​முதல் விலை உயர்த்​தப்​படு​வ​தாக சட்​டப்​பேர​வை​யில் அறி​விப்பு வெளி​யிட்​டுள்ள தமிழக முதல்​வருக்​கும், பால்​வளத்​துறை அமைச்​சருக்​கும் எங்​கள் சங்​கத்​தின் சார்​பில் மனமார்ந்த நன்​றி' என்​று தெரி​வித்​துள்​ளார்​.

தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பால் உற்பத்தியாளர்கள் நலனையும், ஆவின் கூட்டுறவு அமைப்பையும், பொது மக்கள் நலனையும் பாதுகாத்திட அரசும், ஆவின் நிறுவனமும் மறுபரிசீலனை செய்து கொள்முதல் விலை மற்றும் ஊக்கத் தொகை விலையை லிட்டருக்கு ரூ.20 வரை உயர்த்தி வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT