தமிழகம்

மழையால் பாதித்த மக்களை சந்திக்க வேண்டும்: முதல்வருக்கு பழனிசாமி கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: தொடர் கனமழை​யால் பாதிக்​கப்​பட்ட மக்​களை முதல்​வர் சந்திக்க வேண்​டும். பாதிக்கப்​பட்ட விவ​சா​யிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என அதி​முக பொதுச் செய​லாளர் பழனி​சாமி வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: டிட்வா புயல் காரண​மாக கடலோர மாவட்​டங்​களில் நெற்​ப​யிர்​கள், வாழை, கரும்​பு, வெற்றிலை உள்​ளிட்ட பயிர்​கள் பாதிப்படைந்​துள்​ளன. தூத்​துக்​குடி மாவட்​டத்​தில் 1 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட வாழை, பப்பாளி மரங்​கள் சேதமடைந்​துள்ளன.

திருநெல்​வேலி, தென்​காசி, ராம​நாத​புரம் மாவட்​டங்​களிலும் விவ​சாய நிலங்​களில் தண்ணீர் தேங்​கி​யுள்​ள​து. தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயிலாடு​துறை, கடலூர் மாவட்​டங்​களில் 2 லட்சம் ஏக்​கர் நெல் நீரில் மூழ்​கியதால் விவ​சாயிகள் வேதனை அடைந்​துள்ளனர்.

பல காரணங்களால் பயிர்க் காப்​பீடு செய்ய முடி​யாத நிலை உள்​ளது. ஜெயலலிதா ஆட்​சி​யில் அறி​முகம் செய்​யப்​பட்​ட குடிம​ராமத்​துப் பணி திட்​டத்தால் தமிழகத்​தின் நிலத்​தடி நீர்​மட்​டம் உயர்ந்​தது. இந்த பணியை திமுக அரசு நிறுத்​தி​விட்​ட​தாக விவ​சா​யிகள் குற்​றம்​சாட்​டு​கின்​றனர்.

கனமழை​யால் ராமேசுவரம் நகரமே் மூழ்​கி, மக்​கள் தத்​தளிக்​கின்​றனர். அவர்​களது துயரைத் துடைக்​காமல் முதல்​வர் வாக்​கிங்போகும் ​போது நடிகை​யுடன் பேசுவதை வலை​தளத்​தில் பதிவிடு​கிறார். கன்ட்​ரோல் ரூமில் உட்​கார்ந்து ஷூட்​டிங் நடத்​தி​னால் மட்டும் போதாது. பாதிக்​கப்​பட்ட மக்​களை முதல்​வர் சந்​திக்​கச் சென்றால்​தான், கீழே பணி​யாற்​றும் அமைச்​சர்​கள், அதி​காரி​களும் விரைந்து நிவாரண நடவடிக்​கைகளை மேற்​கொள்​வார்​கள்.

கனமழை​யால் பாதிக்​கப்பட்ட விவ​சாய நிலங்​களை அதி​காரி​கள் ஆய்வு செய்​து, பாதிக்கப்​பட்ட விவ​சா​யிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT