நெல்லையில் ‘பொருநை’ அருங்​காட்​சி​யகத்தை முதல்​வர் ஸ்​டா​லின் நேற்று திறந்து வைத்​தார்.

 
தமிழகம்

திருநெல்வேலியில் ரூ.56 கோடியில் ‘பொருநை’ அருங்காட்சியகத்தை திறந்தார் முதல்வர்

அ.அருள்தாசன்

திருநெல்வேலி: ​தாமிரபரணி ஆற்​றங்​கரை​யில் அமைந்​துள்ள ஆதிச்​சநல்​லூர், சிவகளை, கொற்​கை, துலுக்​கர்​பட்டி ஆகிய தொல்​லியல் தளங்​களில் கண்​டெடுக்​கப்​பட்ட அரிய தொல்​பொருட்​களை காட்​சிப்​படுத்​தும் வகை​யில் திருநெல்​வேலி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள ‘பொருநை’ அருங்​காட்​சி​ யகத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்து வைத்​தார்.

பொருநை அருங்​காட்​சி​யகம் அமைக்க 110 விதி​யின்​கீழ் பேர​வை​யில் முதல்​வர் அறி​விப்பு வெளி​யிட்ட நிலை​யில் 13 ஏக்​கர் பரப்​பள​வில் ரூ.56.36 கோடி செல​வில் அருங்​காட்​சி​யகம் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. இதை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்து வைத்துப் பார்​வை​யிட்​டார். பின்​னர், முதல்​வர் வெளி​யிட்ட காணொலி உரை​யில் அவர் பேசி​ய​தாவது: மதுரை கீழடியைத் தொடர்ந்து பொருநை அருங்​காட்​சி​யகம் திறக்​கப்​பட்​டுள்​ளது.

நுண்​-கற்​கருவிக் காலம் தொடங்​கி, இரும்​புக் காலம், தொடக்க வரலாற்றுக் காலம்- என்று தொடர்ச்​சி​யாக வரலாற்​றுத் தடயங்​கள் பொருநை ஆற்​றங்​கரைப் பகு​தி​களில் ஏராள​மாக கிடைக்​கின்​றன.

கொற்​கை, ஆதிச்​சநல்​லூர், சிவகளை போன்ற இடங்​களில், இரும்​புக்காலத்​தைச் சார்ந்த புதைப்​பிடப் பகு​தி​களும், மக்​கள் வாழ்​விடப் பகு​தி​களும் கண்​டு​பிடிக்​கப்​பட்டு உள்ளன. குறிப்​பாக, இரும்பை உருக்கி கருவி​களை செய்​யும் தொழில்​நுட்​பம் தமிழ்​நாட்​டில்​தான் சிறப்​பாக இருந்​திருக்​கிறது. இது​வரை கிடைத்த இரும்பு பொருட்​களி​லேயே, காலத்​தால் முந்​தைய இரும்பு சிவகளை​யில்​தான் கிடைத்​தது.

டிஜிட்​டல் முறை​யில் உரு​வகப்​படுத்​தப்​பட்ட இரும்பு உருக்கு செயல்​முறை, 5-டி முறை​யில் தமிழ் நிலங்​களின் வழி​யாக உணர்​வுப் பயணம், ஒளிப்​படக் காட்​சி, மெய்​நிகர் படகு அனுபவ உரு​வகம், ஆற்​றுப் பள்​ளத்​தாக்கு நாகரி​கங்​களின் தொடு​திரைக் காட்​சி, கருவி​களை உரு​வாக்​கும் இன்​ட​ராக்​டிவ் வால், டிஜிட்​டல் ஃபீட்​பேக் மையம், பொருநை​யின் குரல் பயணம் போன்ற ஏராள​மான நவீன தொழில்​நுட்ப அனுபவங்​களை இங்கு பெறலாம். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இந்​நிகழ்​வில், பேர​வைத் தலை​வர் மு.அப்​பாவு, அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, எ.வ.வேலு, தங்​கம் தென்​னரசு முன்​னிலை வகித்​தனர். தொல்​லியல் துறை ஆணை​யர் மற்​றும் நிதித்​துறை முதன்மை செயலர் த.உதயச்​சந்​திரன், சுற்றுலாத் துறைச் செயலர் க.மணி​வாசன், ஆட்​சி​யர் ஆர்​.சுகு​மார் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்​.

420 ஆசிரியர்​களுக்கு நியமன ஆணை: நெல்லை டக்​கரம்​மாள்​புரத்​தில் கிறிஸ்​துவ நல்​லெண்ண இயக்​கம் சார்​பில் நடை​பெற்ற மனிதநேய மகத்​துவ கிறிஸ்​து​மஸ் பெரு​விழா​வில் பங்​கேற்ற முதல்​வர் மு.க.ஸ்டா​லின் பேசி​ய​தாவது:

சிறு​பான்​மை​யினர் கல்வி நிறு​வனங்​களில் ஆசிரியர்​கள் தேர்​வுக் குழு​வில், அந்​தந்த நிறு​வனத்​தினரே ஆசிரியர்​களை நியமிக்​கும் வகை​யில் விதி​யில் திருத்​தம் செய்​யப்​பட்​டுள்​ளது. ராம​நாத​புரம் மாவட்​டம் தேவிபட்​டினத்​தில் உள்ள புனித யாக்​கோபு ஆலயம் ரூ.1.42 கோடி​யில் புனரமைக்​கப்​படு​கிறது. ஆசிரியர் தகு​தித் தேர்​வில் உள்ள பிரச்​சினை​கள் தொடர்​பாக தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்​றுள்​ளோம் அதனால், 1,439 ஆசிரியர்​கள் சிறு​பான்​மை​யினர் கல்வி நிறு​வனங்​களில் நியமிக்​கப்​பட்​டுள்​ளார்​கள். புதிய விதி​முறை​கள் அமல்​படுத்​து​வதற்கு முன்பு நியமிக்​கப்​பட்ட 420 ஆசிரியர்​களுக்கு கிறிஸ்​து​மஸ் பண்​டிகைக்கு முன்பு நியமன ஆணை​கள் வழங்​கப்​படும்.

பாஜக அரசு சிறு​பான்​மை​யின மக்​களுக்கு எதி​ராகவே செயல்​படு​கிறது. குடி​யுரிமைச் சட்​டத்​துக்கு எதி​ராக திமுக போராடியது. ஆனால், அதி​முக ஆதர​வாக செயல்​பட்டு வாக்​களித்​தது. பாஜக​வுக்கு மதச்​சார்​பின்மை என்​பது வேப்​பங்​கா​யாக கசக்​கிறது. ஊரக வேலை​வாய்ப்பு திட்​டத்​தின் பெயரை மட்​டுமல்ல, அந்த திட்​டத்​தையே மத்​திய அரசு தகர்த்து விட்​டது. வாக்​காளர் பட்​டியலில் உங்​களது வாக்​கு​கள் இருப்​பதை உறுதி செய்து கொள்​ளுங்​கள். பட்​டியலில் மீண்​டும் பெயர் சேர்க்க திமுக நிர்​வாகி​கள் உதவு​வார்​கள். திமுக எப்​போதும் சிறு​பான்​மை​யான மக்​களுக்கு துணை நிற்​கும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

SCROLL FOR NEXT