தமிழகம்

டாஸ்மாக்கில் கூடுதல் கட்டணம் வசூல் சர்ச்சை: அரசுத் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ​தமிழகம் முழு​வதும் டாஸ்மாக் கடைகளில் விற்​பனை செய்​யப்​படும் மதுப்​பாட்​டிலுக்கு ரூ.10 கூடு​தலாக வசூலிப்​ப​தாக புகார்​கள் நில​வு​கின்​றன. கடந்த திமுக ஆட்​சி​யில் பாட்​டிலுக்கு ரூ.10 வசூலிக்​கப்​பட்​டதை முதல்​வர் விஜய், தேர்​தல் பிரச்​சா​ரத்​தின்​போது கடுமை​யாக விமர்​சனம் செய்​தார்.

இந்​நிலை​யில் டாஸ்​மாக் கடைகளில் கூடு​தல் கட்​ட​ணம் வசூல் செய்​வ​தாக வரும் புகார் குறித்து முதல்​வர் விஜய் தலை​மை​யில் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் உயர்​மட்ட ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது.

இதில் மது​விலக்கு துறை அமைச்​சர் கே.​விக்​னேஷ், உள்​துறை செயலர் க.மணி​வாசன் மற்​றும் துறை அதி​காரி​கள் பங்​கேற்​றனர். இந்​தக் கூட்​டத்​தில் கூடு​தல் கட்​ட​ணம் வசூல், 717 டாஸ்​மாக் கடைகள் மூடல் நில​வரம் உட்பட பல விவ​காரங்​கள் குறித்து விரி​வாக விவா​திக்​கப்​பட்​டன.

அதன்​பின்​னர் மதுப்​பாட்​டிலுக்கு நிர்​ண​யிக்​கப்​பட்ட விலையை மட்​டுமே வசூலிக்க வேண்​டும். எக்​காரணம் கொண்​டும் கூடு​தல் கட்​ட​ணம் பெறக்​கூ​டாது.

அதற்​கான வழி​காட்டு நெறி​முறை​களை தயார்​செய்ய வேண்​டுமென துறை அலு​வலர்​களுக்கு முதல்​வர் அறி​வுறுத்​தி​ய​தாக கூறப்​படு​கிறது. இதுத​விர கல்வி மையங்​கள், கோயில்​கள் மற்​றும் பேருந்து நிலை​யங்​களுக்கு அருகே இருந்த 717 டாஸ்​மாக் கடைகள் மூடல் நடவடிக்கை குறித்​தும் அவர் கேட்​டறிந்​தார்.

அப்​போது நிர்​வாக சிக்​கல்​களால் கணிச​மான கடைகள் மட்​டும் இன்​னும் மூடப்​ப​டா​மல் இருப்​ப​தாக அதி​காரி​கள் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. எனினும், அந்த பிரச்சி​னை​களை சரி செய்து மீத​முள்ள கடைகளை​யும் கால தாமதமின்றி உடனே மூடு​வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

அதன்​பின் மூடப்​பட்ட 717 டாஸ்​மாக் கடைகளின் விவரங்​களை வெளிப்​படை​யாக பொதுமக்​களுக்கு அறிவிக்க வேண்​டும் என்பன உள்ளிட்ட அறி​வுறுத்​தல்​களை முதல்​வர் வழங்​கிய​தாக​வும், இது ​சார்ந்து விரை​வில் அறி​விப்​பு​கள் வெளி​யாகலாம்​ எனவும்​ தகவல்​கள்​ கிடைத்​துள்​ளன.

SCROLL FOR NEXT