சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், ஏழுகிணறு, அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகில் ரூ.147 கோடி செலவில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 776 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட ‘முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். உடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர்.

 
தமிழகம்

சிஎம்டிஏ சார்பில் ஏழுகிணறு பகுதியில் ரூ.147 கோடியில் 776 குடியிருப்புகள்: ஒதுக்கீட்டு ஆணைகளை முதல்வர் வழங்கினார்

செய்திப்பிரிவு

சென்னை: வடசென்னை வளர்ச்​சித்​திட்​டத்​தின் கீழ், சிஎம்டிஏ சார்​பில், ஏழு கிணறு பகு​தி​யில ரூ.147 கோடி​யில் கட்​டப்​பட்ட 776 அடுக்​கு​மாடி குடியிருப்புகள் கொண்ட முதல்​வர் நகர்ப்​புற குடி​யிருப்​பு​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்து வைத்​தார்.

இதுகுறித்​து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: வடசென்னை வளர்ச்சி திட்​டத்​தின் ஒரு பகு​தி​யாக, மண்​ணடி, முத்​தி​யால்​பேட்​டை, ஏழுகிணறு, பிராட்வே பிர​காசம் சாலை, வால்​டாக்ஸ் சாலை, ஜட்​காபுரம், கல்​யாணபுரம், வுட்​வொர்ஃப் போன்ற இடங்​களில் நீண்ட கால​மாக சாலை ஓரங்​களி​லும், கால்​வாய் ஓரங்​களி​லும் வசிக்​கும் மக்​களின் வாழ்​வா​தா​ரத்தை மேம்​படுத்​தும் வகை​யில், வடசென்னை வளர்ச்சி திட்​டத்​தின் கீழ், கடந்த 2024 டிச.4-ம் தேதி 776 புதிய அடுக்​கு​மாடி குடியிருப்புகள் கட்​டு​வதற்​கான பணி​களை முதல்​வர் ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார்.

          

தொடர்ந்​து, முதல்​வர் ஆய்வு செய்த நிலை​யில், குடி​யிருப்​பு​களுக்​கான கட்​டு​மானப் பணி​கள் விரைந்து முடிக்​கப்​பட்​டு, ரூ. 147 கோடி ரூபாய் செல​வில் நவீன உட்​கட்​டமைப்பு வசதி​களு​டன் தரைதளம் மற்​றும் 9 தளங்​களு​டன் இரண்டு தொகு​தி​களாக 3.26 லட்​சம் சதுர அடி கட்​டிடப் பரப்​பள​வில் கட்​டப்​பட்​டுள்ள 776 அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​களை கொண்ட முதல்​வர் நகர்ப்​புற குடி​யிருப்​பு​களை முதல்​வர் ஸ்டா​லின் நேற்று திறந்து வைத்​தார்.

144 புதிய குடியிருப்புகள்: பின்​னர், அங்​கன்​வாடி மையம், நகர்ப்​புற நலவாழ்வு மையம், நியாய விலைக் கடைகள், முதல்​வர் படைப்​பகம், நவீன நூல​கம், உடற்​ப​யிற்​சிக் கூடம், திறந்​தவெளி அரங்​கம், குழந்​தைகள் விளை​யாட்​டுப் பகுதி ஆகிய​வற்றை பார்​வை​யிட்​டார். அதன்​பின், பயனாளி களுக்கு ஒதுக்கீட்டு ஆணை​களை​யும் வழங்​கி​னார்.

இதையடுத்​து, வால்​டாக்ஸ் சாலை, தண்​ணீர்​தொட்டி தெரு​வில் வடசென்னை வளர்ச்​சித் திட்​டத்​தின் கீழ், சென்​னைப் பெருநகர் வளர்ச்சி குழு​மம் சார்​பில் கட்​டப்​பட்டு வரும் ஒருங்​கிணைந்த வளாகத்​தில், 700 அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​களின் கட்​டு​மானப் பணி​கள் நடை​பெற்று முடி​யும் தரு​வா​யில் உள்​ளன.

இதன் அரு​கில் சிஎம்டிஏ சார்​பில் ரூ.31 கோடி​யில் தரைதளம் மற்​றும் 9 தளங்​களு​டன் கூடு​தலாக 144 புதிய குடியிருப்புகள் கட்​டு​வதற்​கான பணி​களை​யும் முதல்​வர் தொடங்கி வைத்​தார். நிகழ்ச்​சி​யில், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், அமைச்​சர்​கள் எ.வ.வேலு, தா.மோ.அன்​பரசன், மா.சுப்​பிரமணி​யன்​, பி.கே. சேகர்​பாபு உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT