தமிழகம்

சாகித்ய அகாடமி விருது அறிவிப்புக்காக ச.தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

செய்திப்பிரிவு

சென்னை: எழுத்​தாளர் ச.தமிழ்ச்​செல்​வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்​கப்​பட்​டதற்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் அரசி​யல் கட்சித் தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்: தான் எழுதும் நிலப்​பரப்​பின் கருப்​பொருட்​களை எல்​லாம் கதை​யின் ஓட்​டத்​தில் இயல்​பாகப் பின்​னிப் பிணைக்​கும் எழுத்​தாளர் தோழர் ச.தமிழ்ச்​செல்​வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்​கப்​பட்​டிருப்​ப​தற்கு பாராட்​டு​கள்.

தாமதப்​படுத்​தி​னாலும், இறு​தி​யில் சரி​யான கைகளில் சாகித்ய அகாடமி விருது சேர இருப்​ப​தில் மகிழ்ச்சி கொள்​கிறேன். நம் மண்ணின் கதைகள் அனை​வரை​யும் சேர வாழ்த்​துகிறேன்.

          

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வபெருந்​தகை: தமிழ் இலக்​கி​யத்​தின் வளர்ச்​சிக்​கும், குறிப்​பாக தமிழ் சிறுகதைகளின் பாரம்​பரிய​மும் குறித்து ஆழமான பார்​வையை வழங்​கும் இந்த நூலுக்​குக் கிடைத்​திருக்​கும் இந்த உயரிய அங்​கீ​காரம், எழுத்​தாளர் அவர்​களின் இலக்​கியப் பங்​களிப்​புக்​கான சிறந்த பாராட்​டாகும்.

மார்க்​சிஸ்ட் கட்சி மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம்: கடந்த 50 ஆண்​டு​களாக எழுதி வரும் தமிழின் சிறந்த எழுத்​தாளரான ச.தமிழ்ச்​செல்​வன் சிறுகதைகள், கட்​டுரைகள், குழந்தை இலக்​கி​யம் மட்​டுமல்​லாமல் இடது​சாரி அரசி​யல் சார்ந்த பல்​வேறு படைப்​பு​களை எழு​தி​யுள்​ளார்.

தனது எழுத்​தில் எப்​போதும் உழைக்​கும் வர்க்​கக் கண்​ணோட்​டத்​தில், அழகியல் குறை​யாமல் தொடர்ந்து எழுதி வருபவர். தற்​போது விருது பெற்​றுள்ள நூலை​யும் அதே கண்​ணோட்​டத்​தில் எழுதி விருது பெற்​றுள்​ளார்.

தமிழக பாஜக முன்​னாள் தலைவர் அண்​ணா​மலை: எழுத்​தாளர் தமிழ்ச்​செல்​வனின் எழுத்​துப்​பணி செந்​தமிழ் போல மென்​மேலும் சிறக்க வாழ்த்​துக்​கள்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: எளிமையான நடை​யிலும் மொழி​யிலும் சிறுகதைகளை எழுது​வ​தில் தனித்​து​வ​மிக்​கவ​ராக திகழும் எழுத்​தாளரின் எழுத்​துப் பயணம் மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்​கிறேன்.

தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்: சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்​வான​தால் தேசிய அளவில் தமிழகத்​துக்​கும், தமிழக மக்​களுக்​கும் பெருமை சேர்த்​திருக்​கிறார். எழுத்​தாளர்​களுக்​கும், வாசகர்​களுக்​கும் ஊக்​கமளிக்​கிறார்.

SCROLL FOR NEXT