தமிழகம்

சொத்துக் குவிப்பு வழக்கு பதியப்பட்டுள்ளது என்பதற்காக அமலாக்கத்துறையும் வழக்கு பதிய கட்டாயமில்லை: தலைமை நீதிபதி அமர்வு கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: சொத்​துக் குவிப்பு வழக்கு பதி​யப்​பட்​டுள்​ளது என்​ப​தற்​காக சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற தடைச் சட்​டத்​தின்​கீழ் அமலாக்​கத் ​துறை​யும் வழக்கு பதிய வேண்​டிய கட்​டாயமில்லை என சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்வு தெளிவுபடுத்​தி​யுள்​ளது.

அதி​முக முன்​னாள் அமைச்​சர்​களான வேலுமணி, தங்​கமணி, வீரமணி, விஜய​பாஸ்​கர், காம​ராஜ், அன்​பழகன் உள்​ளிட்​டோருக்கு எதி​ராக ஏற்​கெனவே லஞ்ச ஒழிப்​புத் துறை தரப்​பில் சொத்​துக்​கு​விப்பு மற்​றும் ஊழல் வழக்​கு​களை பதிவு செய்​துள்​ள​தால், அவர்​களுக்கு எதி​ராக சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற தடைச் சட்​டத்​தின்​கீழ் வழக்​குப் பதிவு செய்ய அமலாக்​கத்​துறைக்கு உத்​தர​விடக்​கோரி திமுக எம்பி கிரி​ராஜன், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கை ஏற்​கெனவே விசா​ரித்த உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜிஅருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்வு கடந்த ஏப்​.20-ல் தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில், நீதிப​தி​கள் பிறப்​பித்​துள்ள உத்​தர​வில் கூறியிருப்பதாவது: லஞ்ச ஒழிப்​புத்​துறை போலீ​ஸார் சொத்​துக் குவிப்பு வழக்கை பதிவு செய்​துள்​ளனர் என்​ப​தற்​காக அமலாக்​கத்​துறை​யும் சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற தடைச்​சட்​டத்​தின்​கீழ் வழக்கு பதிய வேண்​டிய கட்​டாயமில்​லை.

சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றத்​துக்கு உரிய ஆதா​ரங்​கள் இருப்​ப​தாக அதி​காரி​கள் திருப்​தி​யடைந்​தால் மட்​டுமே அமலாக்​கத்​துறை வழக்​குப் பதிவு செய்ய முடி​யும்.

வழக்​குப் பதிவு செய்ய வேண்​டு​மா, வேண்​டாமா என்​ப​தை​யும் அமலாக்​கத்​துறை அதி​காரி​கள்​தான் முடிவு செய்ய வேண்​டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் குறிப்​பிட்​டுள்​ளனர்.

SCROLL FOR NEXT