தமிழகம்

திமுக மாணவரணி செயலாளர் மாற்றம் - காரணம் என்ன ?

செய்திப்பிரிவு

நாம் தமிழர் கட்சியில் மாநில இளைஞர் அணி செயலாளராக இருந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, 2021ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது. 2025ம் ஆண்டு மார்ச் மாதம் திமுக மாணவரணி செயலாளராக மாற்றப்பட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ் காந்தி விடுவிக்கப்பட்டு, கட்சியின் கொள்கை பரப்பு இணை செயலாளராக நியமிக்கப்பட்டார். மாணவரணியின் புதிய செய லாளராக வீரமணி என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார். திமுக மாணவரணி செய லாளர் பொறுப்பை பெண் நிர்வாகி ஏற்பது இதுவே முதல்முறை ஆகும்.

ராஜீவ் காந்தியின் பதவி பறிக்கப்பட்டுள்ளதா அல்லது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதா என்பது கட்சியினரை குழப்படைய செய்துள்ளது. இதனிடையே. மாணவரணியை சேர்ந்த பெண்கள் பலர் ராஜீவ் காந்தி மீது புகார் கொடுத்ததால். அவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டுள்ளதாகவும். தேர்தல் நேரம் என்பதால் புகாரின் உண்மை தன்மையை கண்டறிய ரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

          
SCROLL FOR NEXT