சென்னை: தமிழகத்தில் கிருஷ்ணகிரி, திருநெல்வேலி உள்ளிட்ட 6 மாவட்டங்களின் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடதமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மெதுவாக தென்மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக, புதுச்சேரி கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக் குறைந்தது.
தென்னிந்திய பகுதி மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 5-ம் தேதி தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களி
லும், 6 முதல் 9-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் மிதமான மழைபெய்யக்கூடும். இன்று கிருஷ்ணகிரி, தருமபுரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.