தமிழகம்

3.38 லட்சம் பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் விரைவில் தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் 3.38 லட்​சம் பெண் குழந்​தைகள் பயன்​பெறும் வகை​யில் கருப்​பை​வாய் புற்​று ​நோய் தடுப்பூசித் திட்​டத்தை முதல்​வர் விரை​வில் தொடங்கி வைக்​க​வுள்​ள​தாக சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார்.

சென்​னை​யில் அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யில் உலக எய்ட்ஸ் தினம்​-2025 நிகழ்வு நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், உலக எய்ட்ஸ் தின உறு​தி​மொழி ஏற்று எச்​ஐ​வி-எய்ட்ஸ் குறித்த விழிப்​புணர்வு பதாகைகள், விழிப்​புணர்வு குறும்​படத்​துக்​கான குறுந்​தகடை வெளி​யிட்​டார்.

மேலும், விழிப்​புணர்வு கையெழுத்து இயக்​கத்தை தொடங்கி வைத்​து, எச்​ஐ​வி-எய்ட்ஸ் தடுப்பு மற்​றும் சேவை பணி​யில் சிறந்து விளங்​கிய மருத்​து​வ​மனை​கள், சிகிச்சை மையங்​கள், மருத்​து​வர்​கள், தன்​னார்​வலர்​களுக்கு விருதுகள் மற்​றும் சான்​றிதழ்​கள் வழங்​கி​னார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் கூறிய​தாவது: இந்த ஆண்​டுக்​கான கருப்​பொருள் ‘இடையூறுகளை கடந்து எச்​ஐ​வி-எய்ட்ஸ் தொடர்​பான எதிர்​வினை​களை மாற்​று​தல்’ ஆகும். 2030-க்​குள் எச்​ஐ​வி-எய்ட்ஸ் பாதிப்பு இல்​லாத தமிழகத்தை உரு​வாக்க பல்​வேறு விழிப்​புணர்வு நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

இதன் காரண​மாக தமிழகத்​தில் தொற்​றின் தாக்​கம் மிக​வும் குறைந்​துள்​ளது. இந்​தி​யா​வின் எச்​ஐவி பாதிப்பு 0.23 சதவீத​மாக இருக்​கும் நிலை​யில், தமிழகத்​தில் 0.16 சதவீத​மாக உள்​ளது.

தமிழகம்​தான் இந்​தி​யா​வில் உள்ள அனைத்து மாநிலங்​களுக்​கும் முன்​னோடி​யாக 100 சதவீதம் கரு​வுற்ற தாய்​மார்​களுக்கு எச்ஐவி மற்​றும் சிபிலிஸ் பரிசோதனை​கள் செய்​கிறது.

தொற்​றால் பாதிக்​கப்​பட்ட குழந்​தைகளுக்கு ஊட்​டச்​சத்​து, கல்வி மற்​றும் மருத்​துவ செல​வு​களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்​தொகை என 7,618 குழந்​தைகளுக்கு வழங்​கப்​பட்டு வரு​கிறது.

அடுத்த மாதம் தொடக்கம்: தமிழகத்​தில் அரசு பள்​ளி​கள், அரசு நிதி​யுதவி பள்​ளி​களில் படிக்​கும் 9 வயது முதல் 14 வயதுள்ள பெண் குழந்​தைகளுக்கு கருப்​பைவாய் புற்​று​நோய் பாதிப்பு வராமல் தடுக்க தடுப்​பூசி போடும் திட்​டத்தை அடுத்த மாதம் முதல்​வர் தொடங்கி வைக்​க​வுள்​ளார்.

இத்​திட்​டத்​தில் 3.38 லட்​சம் பெண் குழந்தைகள் பயன்​பெறு​வார்​கள். முதல் தவணை​யாக அரியலூர், பெரம்​பலூர், திரு​வண்​ணா​மலை, தரு​மபுரி மாவட்​டங்​களில் செயல்​படுத்​தப்​பட​வுள்​ளது. இந்​தி​யா​விலேயே தமிழகம்​தான் முதல்முறை​யாக இந்த திட்​டத்தை தொடங்​கு​கிறது. இந்​தியா முழு​வதும் இந்த திட்​டத்தை மத்​தியஅரசு, கொண்டு வந்தால், ஒட்டுமொத்த பெண் குழந்​தை களும் பலன் பெறு​வார்​கள். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

சென்னை மாநக​ராட்சிமேயர் ஆர்​.பிரி​யா, சுகா​தா​ரத் துறை செயலர் ப.செந்​தில்​கு​மார், தமிழ்​நாடு மாநில எய்ட்ஸ் கட்​டுப்​பாடு சங்க திட்ட இயக்​குநர் ஆர்​.சீ​தாலட்​சுமி, பொது சுகா​தா​ரம் மற்​றும் நோய் தடுப்பு மருந்​துத்​துறை இயக்​குநர் சோமசுந்​தரம், கூடு​தல் இயக்​குநர்​ தில​கம்​ உள்​ளிட்​டோர்​ இந் நிகழ்வில்​ பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT