தமிழகம்

வாக்கு எண்ணும் மையத்தில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் பார்த்த ஊழியர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் வாக்கு‌ எண்​ணும் மையத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள கண்​காணிப்பு கேமரா அறை​யில் ‘ஜன​நாயகன்’ படம் பார்த்த ஒப்​பந்த ஊழியர் கைது செய்​யப்​பட்​டார்.

சென்னை அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் உள்ள வாக்கு எண்​ணும் மையத்​தில் சைதாப்​பேட்​டை, விரு​கம்​பாக்​கம், வேளச்​சேரி, தி.நகர், மைலாப்​பூர் ஆகிய 5 சட்​டப்​பேரவை தொகு​திக்​குட்​பட்ட மின்​னணு வாக்கு பதிவு இயந்​திரங்​கள் வைக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், இந்த வாக்கு எண்​ணும் மையத்​தில் கண்​காணிப்பு கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்டு 4 அடுக்கு போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டு, 24 மணி நேர​மும் போலீ​ஸார் தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்​டுள்​ளனர்.

குறிப்​பாக தரமணி​யில் செயல்​பட்டு வரும் தனி​யார் நிறு​வனம் ஒப்​பந்த அடிப்​படை​யில் கண்​காணிப்பு கேம​ராக்​கள் பொருத்​தும் பணியை மேற்​கொண்​டது. இந்​நிறு​வனத்​தில் ஒப்​பந்த அடிப்​படை​யில் ஊழிய​ராக உள்ள திரு​வாரூர் மாவட்​டத்​தைச் சேர்ந்த யுவ​ராஜ் (31) என்​பவர் அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் உள்ள வாக்கு எண்​ணும் மையத்​தில் கண்​காணிப்பு கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்​டுள்ள அறை​யில் ஒப்​பந்த ஊழிய​ராக பணி​யாற்றி வந்​தார்.

இந்​நிலை​யில் இவர், பணி​யில் இருந்த போது தனது லேப்​டாப்​பில் விஜய் நடித்​துள்ள ஜனநாயகன் திரைப்​படத்தை சட்​ட​விரோத​மாக பதி​விறக்​கம் செய்து பார்த்​ததுடன் அதனை படம் எடுத்து தனது சமூக வலைதள பக்​கத்​தில் பதி​விட்​டுள்​ளார். இது வைரலானது. இதையடுத்​து, இந்த விவ​காரம் தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி தகவல் தொழில்​நுட்ப அதி​காரி சைலேந்​தர் கோட்​டூர்​புரம் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து யுவ​ராஜை கைது செய்​தனர். ஜனநாயகன் திரைப்​படத்தை சட்ட விரோத​மாக பதி​விறக்​கம் செய்​ததோடு அதை வாக்கு எண்​ணும் மையத்​தில் வைத்தே பார்த்​துள்​ளார். அதோடு அப்​படி பார்த்​ததை சமூக வலை​தளங்​களி​லும் வெளி​யிட்​டுள்​ளார். முன்​ன​தாக இவர், தேர்​தல் ஆணை​யம் வழங்​கிய தற்​காலிக அடை​யாள அட்​டையை​யும் சமூக வலைத்​தளங்​களில் பதி​விட்​டிருந்​தார். இந்த குற்​றச்​சாட்​டு​களுக்​காக யுவ​ராஜை கைது செய்​த​தாக போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT