தமிழகம்

19-ம் தேதி டெல்லியில் மீண்டும் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன்

செய்திப்பிரிவு

சென்னை: டெல்​லி​யில் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் நடத்​திய முதல்​கட்ட விசா​ரணை முடிந்த நிலை​யில் நேற்று அவர் சென்னை திரும்​பி​னார். அவர் அடுத்​தகட்ட விசா​ரணைக்​காக பொங்​கல் பண்டிகை முடிந்த பிறகு ஜன.19-ம் தேதி டெல்லியில் மீண்​டும் ஆஜராகுமாறு ​சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

கரூரில் நடை​பெற்ற விஜய் பிரச்​சார நிகழ்ச்​சி​யின்​போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் குறித்து சிபிஐ விசா​ரித்து வரு​கிறது. இதன்​படி தவெக பொதுச் செய​லா​ளர் என்​.ஆனந்த், தேர்​தல் பிரச்​சார மேலாண்மை பிரிவு பொதுச்​செய​லா​ளர் ஆதவ் அர்​ஜுனா மற்​றும் இணை பொதுச்​செய​லா​ளர் சி.டி.ஆர்​.நிர்​மல்​கு​மார் ஆகியோர் டெல்லி சிபிஐ அலு​வல​கத்​தில் ஆஜராகி ஏற்​கெனவே விளக்​கம் அளித்​திருந்​தனர்.

இதைத்​தொடர்ந்​து, கட்​சி​யின் தலை​வர் விஜய்க்கு சிபிஐ சம்​மன் அனுப்​பியது. அதன்​படி, நேற்று முன்​தினம் டெல்​லி​யில் அதி​காரி​கள் முன்​னிலை​யில் அவர் ஆஜரா​னார். சுமார் 7 மணி நேரம் விசா​ரணை நடத்​தப்​பட்​டது. தொடர்ந்​து, நேற்​றும் (ஜன.13-ம் தேதி) ஆஜராகு​மாறு விஜய்க்கு அதி​காரி​கள் அறி​வுறுத்​தினர்.

ஆனால், ‘ஜன​நாயகன்’ திரைப்பட வெளி​யீடு தொடர்​பான ஆலோ​சனை​கள் உள்​ளிட்ட பல்​வேறு காரணங்​களைக் கூறி, அடுத்த வாரம் ஆஜராவ​தாக விஜய் தரப்​பில் கோரிக்கை வைக்​கப்​பட்​டது. இதனை ஏற்ற அதி​காரி​கள், அடுத்​தக்​கட்ட விசா​ரணைக்​கான தேதியை இன்​னும் ஓரிரு நாட்​களில் சம்​மன் மூலம் தெரி​விப்​பதா கூறினர்.

இந்​நிலை​யில், டெல்​லி​யில் தங்​கி​யிருந்த விஜய், நேற்று பிற்பகல் 1 மணி அளவில் தனது நிர்​வாகி​களு​டன் விமானம் மூலம் சென்னை திரும்​பி​னார். அப்​போது சென்னை விமான நிலை​யத்​தில் சிடிஆர்.நிர்​மல்​கு​மார் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஜன.13-ம் தேதி (நேற்​று) சிபிஐ விசா​ரணை தொடர வேண்​டி​யிருந்​தது.

இருப்​பினும், பொங்​கல் பண்​டிகை, ‘ஜன​நாயகன்’ திரைப்​படப் பணி​கள் மற்​றும் கட்சி சார்ந்த முக்​கிய ஆலோ​சனை​கள் இருப்​ப​தால், வேறொரு தேதி​யில் விசா​ரணையை வைத்​துக்​கொள்ள விடுத்த கோரிக்​கையை அதிகாரிகள் ஏற்​றனர். இதனால் அடுத்​த​வாரம் விஜய் மீண்​டும் ஆஜராகி விளக்​கம் தர வேண்டும் என அறி​வுறுத்​தப்பட்டது.

கரூர் சம்​பவத்​தின்​போது 607 காவலர்​கள் பாது​காப்பு பணி​யில் இருந்​த​தாக பேர​வை​யில் முதல்​வர் ஸ்டா​லின் கூறி​யிருந்தார். ஆனால், அப்​போதையை சட்​டம் ஒழுங்​கு- கூடு​தல் டிஜிபி டேவிட்​சன் தேவாசீர்​வாதம் கூறும் போது, 500 காவலர்​கள் இருந்​த​தாகக் தெரிவித்துள்ளார். ஒரு சாதாரண எண்​ணிக்​கை​யிலேயே இவ்​வளவு முரண்​பாடு​கள் இருக்​கும்​போது, உண்மை நிலை எப்​படி இருக்​கும்.

தமிழக அரசு மற்றும் காவல்​துறை​யின் தொடர் தவறுகளே கரூர் சம்​பவத்​துக்​குக் காரணம். இதற்​கான ஆதா​ரங்​களை​யும் சிபிஐ-​யிடம் சமர்ப்​பித்துள்​ளோம். குறிப்​பாக, உயி​ரிழந்​தவர்​களின் பிரேதப் பரிசோதனை​யில் பல்​வேறு குளறு​படிகள் நடந்​துள்​ளன.

மேலும், பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினரை மிரட்​டி, கையெழுத்து வாங்​கிய​தாக பல புகார்​கள் வந்​ததுள்ளன. இதுகுறித்து விரி​வான விசா​ரணை நடத்​து​வ​தாக சிபிஐ அதி​காரி​கள் உறு​தி​யளித்​துள்​ளனர்.

ஜனநாயகன் திரைப்​படம் அமை​தி​யான முறை​யில் வெளி​யாக வேண்​டும் என மக்​கள் விரும்​பு​கிறார்​கள். படம் வெளி​யீடு தொடர்​பான நீதி​மன்​றத் தீர்ப்​புக்​குப் பிறகு எங்​கள் அடுத்​தகட்ட முடிவை அறி​விப்​போம். எங்​கள் நிலைப்​பாட்​டில் இருந்து பின்​வாங்​க​மாட்​டோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

இதனிடையே விஜய் மீண்டும் வரும் 19-ம் தேதி சிபிஐ முன்பு ஆஜராகுமாறு நேற்று சம்மன் அனுப்பப்பட்டது. இதேபோல் தமிழக காவல் அதிகாரிகளும் ஆஜராக அறிவுறுத்தப்பட்டதாக தெரிகிறது.

SCROLL FOR NEXT