தமிழகம்

திருப்​பரங்​குன்​றம் விவகாரம்: பாஜக மாநில தலைவர் உட்பட 113 பேர் மீது வழக்கு

செய்திப்பிரிவு

மதுரை: ​திருப்​பரங்​குன்​றம் மலை​யில் தீபம் ஏற்​றும் விவகாரத்​தில் போராட்​டம் நடத்​திய பாஜக மாநிலத் தலைவர் நயி​னார் நாகேந்​திரன் உட்பட 113 பேர் மீது 7 பிரிவு​களில் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற உயர் நீதி​மன்ற நீதிபதி ஜிஆர்​.சு​வாமி​நாதன் உத்தரவிட்டார்.

ஆனால், 144 தடையை காரணம் காட்டி தீபம் ஏற்ற அனு​மதி மறுக்​கப்​பட்​டது. இதைக் கண்​டித்​து, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் மற்​றும் இந்து மக்​கள் கட்​சி, ஆலயப் பாது​காப்பு குழு உள்​ளிட்ட அமைப்​பினர் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அவர்​களை போலீ​ஸார் கைது செய்​து, பின்​னர் விடு​வித்​தனர்.

இந்​நிலை​யில், நயி​னார் நாகேந்​திரன் உட்பட 93 பாஜக, இந்து மக்​கள் கட்​சி, ஆலயப் பாது​காப்​புக் குழு​வைச் சேர்ந்த 20 பேர் என மொத்​தம் 113 பேர் மீது சட்​ட​விரோத​மாக கூடியது, போக்​கு​வரத்​துக்கு இடையூறு, அனு​ம​தி​யின்றி போராட்​டம் செய்​தல் உள்​ளிட்ட 7 பிரிவு​களில் திருப்​பரங்​குன்​றம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT