நந்திவரம் - கூடுவாஞ்சேரி பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் எம்​.கே.டி. கார்த்​திக் தண்​ட​பாணி

 
தமிழகம்

செங்கல்பட்டு தொகுதி வேட்பாளர்கள் ஓட்டு வேட்டை

செய்திப்பிரிவு

மறைமலை நகர்: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்​சிக்கு உட்பட்ட காட்டாங்​கொளத்​தூர், தைலாபுரம், பேரமனூர் கொருக்​கங்​தாங்கல், சட்டமங்​கலம், மறைமலை நகர் பஜார் உள்ளிட்ட பகுதி​களில் அதிமுக நகர செயலாளர் எம்.ஜி.கே.கோபி கண்ணன் தலைமையில் அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் இரட்டை இலை சின்னத்​துக்கு வாக்கு சேகரித்​தார்.

அப்போது அவர் கூறியதாவது, பேரமனூர் ரயில்வே கேட் பகுதியில் பாலம் அமைப்​பதில் ஏற்பட்​டுள்ள பிரச்​சினை​களுக்கு சமூகத் தீர்வு எட்டப்​படும்.

சுத்தமான குடிநீர் தேவை நிறைவேற்​றப்​படும் சாலைகள் மேம்படுத்​தப்​படும், பராமரிக்​கப்​ப​டாமல் உள்ள பூங்காக்கள் முறையாக பராமரிக்​கப்​படும், ஆப்பூர் பகுதியில் கொட்டப்​படும் குப்பை கழிவு​களால் திருக்​கச்​சூர், சட்டமங்கலம் உள்ளிட்ட பகுதி​களில் நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்​ளப்​படும்.

மக்கள் பாதுகாப்பாக வசிப்​ப​தற்கு ஏற்ற சூழல் மறைமலை நகரில் அமைக்​கப்​படும் என்று பொதுமக்​களிடம் தெரிவித்து வாக்குகளை சேகரித்​தார்.

மறைமலை நகரில் வாக்கு சேகரித்த அதி​முக வேட்​பாளர் கஜேந்திரனுக்கு பூரண கும்ப மரி​யாதை அளிக்கப்​பட்​டது.

செங்​கல்​பட்டு தொகுதி திமுக கூட்​டணி வேட்​பாளர் எம்​.கே.டி. கார்த்​திக் - தண்​ட​பாணி கூடு​வாஞ்​சேரி, நந்​திவரம் பகு​தி​யில் உதய சூரியன் சின்​னத்​துக்கு வாக்கு கேட்டு பேசி​ய​தாவது; திமுக ஆட்​சிக் காலத்​தில் முதல்​வர் ஸ்டா​லினின் திட்​டங்​கள் அனைத்து தரப்​பினரும் ஏற்​றுக் கொள்​ளும் வகை​யில் இருக்​கிறது. இதனால் மற்ற மாநிலங்​களும் தமிழக திட்​டங்​களை செயல்​படுத்​துகின்​ற​னர்.

மகளிர் உரிமைத் தொகை திட்​டம் பெண்​களிடம் வரவேற்பு பெற்​றுள்​ளது. திமுக ஆட்சி மீண்​டும் அமைந்​தால் தொகு​திக்கு பல்​வேறு திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​படும் என பேசி​னார்.

SCROLL FOR NEXT