தமிழகம்

42 நாட்களுக்கு பிறகு அமைச்சரவை விரிவாக்கம்: புதுச்சேரியில் 3 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

இலாகா விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தகவல்

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்​சேரி​யில் சட்​டப்பேரவை தேர்​தல் முடிவு​கள் வெளி​யாகி 42 நாட்​களுக்கு பிறகு அமைச்​சரவை நேற்று விரிவாக்கம் செய்​யப்​பட்​டது. புதி​தாக 3 அமைச்சர்​கள் பதவியேற்றனர்.

புதுச்​சேரி சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், மொத்​தம் உள்ள 30 தொகு​தி​களில் என்​டிஏ கூட்​டணி 18 தொகு​தி​களில் வெற்றி பெற்று ஆட்​சியை பிடித்​தது. மே 13-ம் தேதி முதல்​வ​ராக ரங்​க​சாமி, அமைச்​சர்​களாக பாஜகவை சேர்ந்த நமச்​சி​வா​யம், என்​ஆர்​ ​காங்​கிரஸைச் சேர்ந்த மல்​லாடி கிருஷ்ணா​ராவ் ஆகியோர் பதவி​யேற்​றனர்.

இந்​நிலை​யிவ் பாஜகவை சேர்ந்த ஜி.என்​.எஸ்​.​ராஜசேகர், என்​ஆர்​ காங்​கிரஸைச் சேர்ந்த சிவக்​கொழுந்​து, ராஜவேலு ஆகியோரை அமைச்​சர்​களாக பரிந்​துரை செய்​து, அதற்​கான கோப்பை துணைநிலை ஆளுநர் கைலாஷ்​நாதனிடம் முதல்​வர் ரங்​க​சாமி ஜூன் 3-ம் தேதி வழங்​கி​னார். மத்​திய உள்​துறைக்கு அனுப்​பப்​பட்ட இந்த கோப்​புக்கு குடியரசுத் தலை​வர் ஜூன் 8-ம் தேதி முறைப்​படி ஒப்​புதல் அளித்​தார்.

இதையடுத்து புதுச்​சேரி பழைய துணைநிலை ஆளுநர் மாளிகையில் நேற்று (ஜூன் 17) காலை நடந்த அமைச்​சரவை விரி​வாக்க நிகழ்​வில், புதிய அமைச்சர்​களாக ஜி.என்​.எஸ்​.ராஜசேகர், என்​ஆர்​ ​காங்​கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவக்​கொழுந்​து, ராஜவேலு ஆகியோ​ருக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்​நாதன் பதவி பிர​மாண​மும், ரகசிய காப்பு பிர​மாணமும் செய்து வைத்​தார்.

நிகழ்ச்​சி​யில் முதலா​வ​தாக வந்தே மாதர​மும், தொடர்ந்து தேசிய கீத​மும், இறு​தி​யாக தமிழ்த்​தாய் வாழ்த்​தும் இசைக்​கப்​பட்​டன. பதவி​யேற்பு நிகழ்ச்​சி​யில் என்​டிஏ கூட்​ட​ணி​யிலுள்ள லஜக தலைவர் ஜோஸ் சார்​லஸ் மார்ட்​டின் பங்​கேற்​க​வில்​லை. அமைச்​சர்​கள் பதவி​யேற்​றாலும் இது​வரை எந்த அமைச்​சருக்​கும் இலா​காக்​கள் ஒதுக்​கப்​பட​வில்​லை. நேற்று பொறுப்​பேற்ற புதிய அமைச்​சர்​களை, சட்​டப்​பேர​வைக்கு வளாகத்​தில் உள்ள அவர​வர் அறைகளில் உள்ள இருக்​கை​களில் அமர வைக்​கப்​பட்​டனர்,

அப்​போது முதல்​வர் ரங்​க​சாமி செய்​தி​யாளர்​களிடம் கூறும்போது, “விரை​வில் அமைச்​சர்​களுக்கு இலா​காக்​கள் ஒதுக்​கப்​படும். பேர​வைத் தலை​வர் தேர்​தல் விரை​வில் அறிவிக்​கப்​படும். பேர​வைத் தலை​வர் பதவி என்​ஆர்​ ​காங்​கிரஸுக்​கா, பாஜக​வுக்கா என்​பது அதை கொடுக்​கும்​போது தெரி​யும்” என்​றார்​.

SCROLL FOR NEXT